ETV Bharat / state

தரைமட்டமான பயணியர் நிழற்குடை -பொதுமக்கள் போராட்டம்

author img

By

Published : May 31, 2019, 2:50 PM IST

தூத்துக்குடி: பொட்டலூரணி கிராமத்தில் அரசு அனுமதியின்றி பயணிகள் நிழற்குடை இடித்து தரைமட்டமாக்கிய காற்றாலை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தரைமட்டமான பயணியர் நிழற்குடை

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் நிறுவனத்தின் சார்பில் காற்றாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காற்றாலை அமைப்பதற்கு தேவையான உபகரணங்களை கொண்டு செல்வதற்கு பொட்டலூரணி கிராம சாலைதான் முக்கிய வழித்தடமாக இருக்கிறது. இந்நிலையில், காற்றாலை உபகரணங்கள் கொண்டு செல்ல அப்பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை இடையூறாக இருந்துள்ளது.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை
காவல்துறையினர் பேச்சுவார்த்தை

இதனால் காற்றாலை நிறுவனம் பொட்டலூரணி கிராம மக்களின் அனுமதி இல்லாமல் அங்கிருந்த பயணியர் நிழற்குடையை இரவோடு இரவாக ஜேசிபி கொண்டு இடித்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்த பொட்டலூரணி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பொட்டலூரணி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் வேலையில்லா சூழ்நிலையை பயன்படுத்தி காற்றாலை நிறுவனத்திற்கு ஒத்துழைத்து உதவுமாறு இளைஞர்களுக்கு 50,000 மதிப்பிலான காசோலை வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டினர்.

பொதுமக்கள் போராட்டம்
பொதுமக்கள் போராட்டம்

ஒரு தனியார் நிறுவனத்திற்காக அரசு சொத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவைகுண்டம் தாசில்தார் சந்திரனிடம் கிராம மக்கள் புகார் அளித்தனர். ஆனால் வெகு நேரமாகியும் காவல்துறையினர் யாரும் வராததால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் திருநெல்வேலி தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்வோம் என போலீசார் உறுதியளித்த பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் நிறுவனத்தின் சார்பில் காற்றாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காற்றாலை அமைப்பதற்கு தேவையான உபகரணங்களை கொண்டு செல்வதற்கு பொட்டலூரணி கிராம சாலைதான் முக்கிய வழித்தடமாக இருக்கிறது. இந்நிலையில், காற்றாலை உபகரணங்கள் கொண்டு செல்ல அப்பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை இடையூறாக இருந்துள்ளது.

காவல்துறையினர் பேச்சுவார்த்தை
காவல்துறையினர் பேச்சுவார்த்தை

இதனால் காற்றாலை நிறுவனம் பொட்டலூரணி கிராம மக்களின் அனுமதி இல்லாமல் அங்கிருந்த பயணியர் நிழற்குடையை இரவோடு இரவாக ஜேசிபி கொண்டு இடித்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்த பொட்டலூரணி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பொட்டலூரணி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் வேலையில்லா சூழ்நிலையை பயன்படுத்தி காற்றாலை நிறுவனத்திற்கு ஒத்துழைத்து உதவுமாறு இளைஞர்களுக்கு 50,000 மதிப்பிலான காசோலை வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டினர்.

பொதுமக்கள் போராட்டம்
பொதுமக்கள் போராட்டம்

ஒரு தனியார் நிறுவனத்திற்காக அரசு சொத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருவைகுண்டம் தாசில்தார் சந்திரனிடம் கிராம மக்கள் புகார் அளித்தனர். ஆனால் வெகு நேரமாகியும் காவல்துறையினர் யாரும் வராததால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் திருநெல்வேலி தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்வோம் என போலீசார் உறுதியளித்த பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா கருங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் அரசு அனுமதியின்றி பயணிகள் நிழற்குடை இடித்து தரைமட்டமாக்கிய காற்றாலை நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொட்டலூரணி கிராமத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் நிறுவனத்தின் சார்பில் காற்றாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக காற்றாலை நிறுவனத்தின் சார்பில் மற்றவர்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் காற்றாலை அமைக்க தேவைப்படும் உபகரணங்களை சேமித்து வைக்க சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இடம்  நிறுவப்பட்டுள்ளது.
காற்றாலை அமைப்பதற்கு தேவையான உபகரணங்களை கொண்டுவருவதற்கு  பொட்டலூரணி கிராம சாலை மிக முக்கியமான வழித்தடமாகும்.

ஆகவே அவ்வழியே காற்றாலை
உபகரணங்கள் கொண்டு செல்வதற்கு இடையூறாக இருந்த பேருந்து நிறுத்தத்தை காற்றாலை நிர்வாக கூட்டாளிகள் இரவோடு இரவாக ஜேசிபி கொண்டு இடித்துள்ளனர். இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், பொட்டலூரணி கிராமத்தை சேர்ந்த இளைஞர்களிடம் வேலையில்லா சூழ்நிலையை பயன்படுத்தி காற்றாலை நிறுவனத்திற்கு ஒத்துழைத்து உதவுமாறு இளைஞர்களுக்கு 50,000 மதிப்பிலான காசோலை வழங்கியுள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய செயலால் ஒற்றுமையோடு வாழுகின்ற பொட்டலூரணி மக்களிடையே சமூக நல்லிணக்கம் சீர்குலைவு ஏற்படும் வண்ணம் இருப்பதாகவும், ஒரு வார தனியார் நிறுவனத்திற்காகஅரசு சொத்தை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக திருவைகுண்டம் தாசில்தார் சந்திரனிடம் கிராம மக்கள் புகார் அளித்தனர். ஆனால் வெகு நேரமாகியும் போலீஸ் அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் திருநெல்வேலி  தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல்அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமலை, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி பழனி குமார் உள்ளிட்ட காவல்துறையினர் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம்  பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர்  குற்றவாளிகள் மீது  நடவடிக்கை எடுத்து கைது செய்வோம் என போலீசார் உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.