ETV Bharat / state

கட்சி கொடியேற்றுவதில் போட்டி: அதிமுகவினர் மீது தடியடி நடத்திய காவல்துறை

author img

By

Published : Oct 22, 2020, 6:42 AM IST

தூத்துக்குடி: விளாத்திகுளத்தில் அதிமுகவினருக்கும், திமுகவினருக்கு இடையே கட்சி கொடி ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டது.

அதிமுகவினர் மீது தடியடி நடத்திய காவல்துறை
அதிமுகவினர் மீது தடியடி நடத்திய காவல்துறை

தூத்துக்குடி மாவட்ட விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் நேற்று (அக்.21) திமுக சார்பில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கட்சி காவல் நிலையத்தில் கொடி ஏற்றுவதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன் அனுமதி கேட்கப்பட்டது.

அதிமுகவினர் மீது தடியடி நடத்திய காவல்துறை

அவர்களுக்கு அனுமதி அளித்த காவல்துறையினர், 200 பேர் மட்டுமே கூட வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும், கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

விளாத்திகுளம் பேருந்து முன்பு நிறைய உள்ள கொடிக் கம்பத்தில் கொடியை ஏற்றுவதற்காக அதிமுகவினரும் அனுமதி கேட்டனர். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், தடையை மீறி அதிமுகவினர் கொடி ஏற்றுவதற்கு தயாராக இருந்துள்ளனர்.

மேலும், பேருந்து நிலையம் முன்பு இரு கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர்‌. அப்போது இரு கட்சியினருக்கும் சாலையோரத்தில் கொடிக்கம்பங்கள் நடுவது தொடர்பாக வாய்த் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து மாவட்ட ஏடிஎஸ்பி கோபி தலைமையில், டிஎஸ்பிக்கள் சங்கர், கலைக்கதிரவன் தலைமைகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விளாத்திகுளம் பேருந்து நிலையத்துக்கு முன் குவிக்கப்பட்டனர். அங்கிருந்த அதிமுகவினரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதன்பின் மாலை 5 மணிக்கு திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் திமுக கொடி ஏற்றப்பட்டது. இதில், முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன், ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.

அப்போது விளாத்திகுளம் அதிமுக எம்எல்ஏ சின்னப்பன் தலைமையிலான அதிமுகவினர் சூரங்குடி சாலையில் இருந்து ஊர்வலமாக வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளு, முள்ளுவில் காவல்துறையினர் சிறிது தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால் எம்எல்ஏ கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், காவல்துறையினரை கண்டித்து எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டு கோஷங்களை முழங்கினர். இதற்கிடையே நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திமுகவினர் அப்பகுதியிலிருந்து சென்றுவிட்டனர்.

தகவலறிந்து திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநவ் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பேருந்து நிலையத்தின் முன்பு உள்ள அதிமுக கொடி கம்பத்தில் சின்னப்பன் எம்எல்ஏ கட்சி கொடி ஏற்றினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அங்கு பதற்றம் நிலவியது.

இதையும் படிங்க: 550 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

தூத்துக்குடி மாவட்ட விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் நேற்று (அக்.21) திமுக சார்பில் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கட்சி காவல் நிலையத்தில் கொடி ஏற்றுவதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன் அனுமதி கேட்கப்பட்டது.

அதிமுகவினர் மீது தடியடி நடத்திய காவல்துறை

அவர்களுக்கு அனுமதி அளித்த காவல்துறையினர், 200 பேர் மட்டுமே கூட வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும், கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

விளாத்திகுளம் பேருந்து முன்பு நிறைய உள்ள கொடிக் கம்பத்தில் கொடியை ஏற்றுவதற்காக அதிமுகவினரும் அனுமதி கேட்டனர். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், தடையை மீறி அதிமுகவினர் கொடி ஏற்றுவதற்கு தயாராக இருந்துள்ளனர்.

மேலும், பேருந்து நிலையம் முன்பு இரு கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர்‌. அப்போது இரு கட்சியினருக்கும் சாலையோரத்தில் கொடிக்கம்பங்கள் நடுவது தொடர்பாக வாய்த் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து மாவட்ட ஏடிஎஸ்பி கோபி தலைமையில், டிஎஸ்பிக்கள் சங்கர், கலைக்கதிரவன் தலைமைகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விளாத்திகுளம் பேருந்து நிலையத்துக்கு முன் குவிக்கப்பட்டனர். அங்கிருந்த அதிமுகவினரை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதன்பின் மாலை 5 மணிக்கு திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமையில் திமுக கொடி ஏற்றப்பட்டது. இதில், முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன், ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டனர்.

அப்போது விளாத்திகுளம் அதிமுக எம்எல்ஏ சின்னப்பன் தலைமையிலான அதிமுகவினர் சூரங்குடி சாலையில் இருந்து ஊர்வலமாக வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளு, முள்ளுவில் காவல்துறையினர் சிறிது தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால் எம்எல்ஏ கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும், காவல்துறையினரை கண்டித்து எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டு கோஷங்களை முழங்கினர். இதற்கிடையே நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திமுகவினர் அப்பகுதியிலிருந்து சென்றுவிட்டனர்.

தகவலறிந்து திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநவ் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பேருந்து நிலையத்தின் முன்பு உள்ள அதிமுக கொடி கம்பத்தில் சின்னப்பன் எம்எல்ஏ கட்சி கொடி ஏற்றினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அங்கு பதற்றம் நிலவியது.

இதையும் படிங்க: 550 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.