தூத்துகுடி மாவட்டம், கோவில்பட்டியில் கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியுடன் இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு சுழற் கோப்பைக்கான 11ஆவது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் மே 16ஆம் தேதி முதல் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுவதில் இருந்து 16 அணிகள் கலந்துக் கொண்டன. இப்போட்டியின் முதல் அரையிறுதி போட்டியில் சென்னை ஐசிஎப் அணி, பெங்களூர் ஹாக்கி அசோசியேஷன் அணிகள் மோதின. இதில், இதில் 6 - 2 என்ற கோல் கணக்கில் பெங்களூர் ஹாக்கி அசோசியேஷன் அணியை வீழ்த்தி சென்னை ஐசிஎப் அணி தகுதி பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில், மும்பை ஆல் இந்தியா கஸ்டம்ஸ் - ஜிஎஸ்டி அணி, செகந்திராபாத் சென்ட்ரல் ரயில்வே அணிகள் மோதின. இதில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 2 -2 என்ற கோல்கணக்கில் சமநிலையில் இருந்ததால், ஸீட் அவுட் முறையில் 6 - 5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி செகந்திராபாத் சென்ட்ரல் ரயில்வே அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இன்று கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூர் ஹாக்கி அசோசியேஷன் அணி, செகந்திராபாத் சென்ட்ரல் ரயில்வே அணியுடன் மோதுகிறது.