ETV Bharat / state

’ராகுல் காந்தியின் நடைபயணத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை..!’ - சீமான்

author img

By

Published : Sep 5, 2022, 6:27 PM IST

ராகுல் காந்தியின் நடைபயணம் அவரது உடலுக்கும், தொண்டர்களுக்கும் புத்துணர்ச்சியைத் தருமே தவிர அதனால் மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த சீமான்

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்’ குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடி காணிக்கை செலுத்தியும், பச்சரிசி, வெல்லம் துலாபாரத்திற்கு கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோயில்களில் தமிழில் அர்ச்சனை பெயர் அளவிலே உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட வேண்டும் எனத் தெரிவித்தார். ஆனால், கருணாநிதி ஆட்சியின்போது தமிழில் நீதிமன்றங்களில் வழக்காட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

குடியரசு தலைவரின் கையெழுத்திற்காக எனது இனமே காத்துக் கொண்டிருக்கிறது என வேதனை தெரிவித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு ’திராவிட மாடல்’ என்று சொல்வதை விட ’தமிழ் நாட்டு மாடல்’ என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும் என கேட்டுக்கொண்ட அவர் ராகுல் காந்தியின் நடைபயணம் அவரது உடலுக்கும், கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்வை கொடுக்குமே தவிர மக்களுக்கு இல்லை என்றார்.

மேலும், "ஜிஎஸ்டி, நீட், சிஏஏ, போன்ற திட்டங்களுக்கு தொடக்கமே காங்கிரஸ் கட்சி தான். நீங்கள் பிள்ளையைப் பெற்று பெயர் வைத்துள்ளீர்கள் நான் வளர்க்கிறேன் என மோடி தெரிவிப்பார். இதனால் தான் காங்கிரஸ் கட்சியினரால் எதிர்த்து பாராளுமன்றத்தில் பேச முடியவில்லை என தொடர்ந்து பேசிய அவர், விடுதலைப் புலிகளை பலப்படுத்தும் முயற்சியில் ஹெச். ராஜா செய்து வருகிறார். அவருக்கு எனது நன்றி என தெரிவித்து கொண்ட அவர் அனைவரும் மாடலாக தான் இருக்கிறார்கள் தவிர ஆட்சி செய்யவில்லை எனவும் விமர்சனம் செய்தார்.

மேலும், நிதி நிலைமை மோசமாக இருப்பதாக கூறி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியவில்லை என தெரிவித்த அரசு தற்போது மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பது ஏன்? தற்போது நிதி நிலைமை வலிமை பெற்று விட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

கஞ்சா, குட்கா அபின் ஹெராயின், போன்றவை முருகன் மீது ஆணையாக போதை பொருள்கள் என ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் டாஸ்மாக் விற்கக்கூடிய மதுபானங்கள் என்பது நாழிக்கிணறு தீர்த்தமா? என கேள்வி எழுப்பினார். திருச்செந்தூர் நகராட்சியின் குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆடியோ வெளியிட்ட திமுக கவுன்சிலருக்கு எனது நன்றி என தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதுமைப் பெண் திட்டம்... டெல்லி முதலமைச்சருடன் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்’ குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். மகன் மாவீரன் பிரபாகரனுக்கு முடி காணிக்கை செலுத்தியும், பச்சரிசி, வெல்லம் துலாபாரத்திற்கு கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோயில்களில் தமிழில் அர்ச்சனை பெயர் அளவிலே உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட வேண்டும் எனத் தெரிவித்தார். ஆனால், கருணாநிதி ஆட்சியின்போது தமிழில் நீதிமன்றங்களில் வழக்காட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

குடியரசு தலைவரின் கையெழுத்திற்காக எனது இனமே காத்துக் கொண்டிருக்கிறது என வேதனை தெரிவித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு ’திராவிட மாடல்’ என்று சொல்வதை விட ’தமிழ் நாட்டு மாடல்’ என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும் என கேட்டுக்கொண்ட அவர் ராகுல் காந்தியின் நடைபயணம் அவரது உடலுக்கும், கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்வை கொடுக்குமே தவிர மக்களுக்கு இல்லை என்றார்.

மேலும், "ஜிஎஸ்டி, நீட், சிஏஏ, போன்ற திட்டங்களுக்கு தொடக்கமே காங்கிரஸ் கட்சி தான். நீங்கள் பிள்ளையைப் பெற்று பெயர் வைத்துள்ளீர்கள் நான் வளர்க்கிறேன் என மோடி தெரிவிப்பார். இதனால் தான் காங்கிரஸ் கட்சியினரால் எதிர்த்து பாராளுமன்றத்தில் பேச முடியவில்லை என தொடர்ந்து பேசிய அவர், விடுதலைப் புலிகளை பலப்படுத்தும் முயற்சியில் ஹெச். ராஜா செய்து வருகிறார். அவருக்கு எனது நன்றி என தெரிவித்து கொண்ட அவர் அனைவரும் மாடலாக தான் இருக்கிறார்கள் தவிர ஆட்சி செய்யவில்லை எனவும் விமர்சனம் செய்தார்.

மேலும், நிதி நிலைமை மோசமாக இருப்பதாக கூறி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியவில்லை என தெரிவித்த அரசு தற்போது மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பது ஏன்? தற்போது நிதி நிலைமை வலிமை பெற்று விட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

கஞ்சா, குட்கா அபின் ஹெராயின், போன்றவை முருகன் மீது ஆணையாக போதை பொருள்கள் என ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் டாஸ்மாக் விற்கக்கூடிய மதுபானங்கள் என்பது நாழிக்கிணறு தீர்த்தமா? என கேள்வி எழுப்பினார். திருச்செந்தூர் நகராட்சியின் குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆடியோ வெளியிட்ட திமுக கவுன்சிலருக்கு எனது நன்றி என தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதுமைப் பெண் திட்டம்... டெல்லி முதலமைச்சருடன் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.