ETV Bharat / state

நடுக்கடலில் காணாமல் போன மீனவர்கள்: மூன்றாவது நாளாக தேடும் பணி தீவிரம் - நடுக்கடலில் காணாமல் போன மீனவர்கள்

திருச்செந்தூர் அருகே நடுக்கடலில் காணாமல் போன இரண்டு மீனவர்களை தேடும் பணி மூன்றாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூன்றாவது நாளாக தேடும் பணி தீவிரம்
மூன்றாவது நாளாக தேடும் பணி தீவிரம்
author img

By

Published : Aug 3, 2022, 5:43 PM IST

தூத்துக்குடி: திருச்செந்தூர் அமலி நகர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினர். அப்போது திருச்செந்தூரில் இருந்து சுமார் 22 கடல் மைல் தொலைவில் கடலில் ஏற்பட்ட சீற்றத்தின் காரணமாக படகு கவிழ்ந்தது.

படகிலிருந்த நான்கு மீனவர்களில் நடுக்கடலில் தத்தளித்த இரண்டு பேரை மற்றொரு படகில் சென்ற மீனவர்கள் மீட்டனர். மேலும் இரண்டு பேரை தேடும் பணி விசைப்படகுகள் மற்றும் 10 பைபர் படகுகள் மூலமாக நடைபெற்றது.

மூன்றாவது நாளாக தேடும் பணி தீவிரம்

அதில் மீனவர்கள் மீட்கப்படாத நிலையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஆதேஷ், அதிராஜ் ஆகிய இரண்டு ரோந்துக் கப்பல்கள் மூலமாகவும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாகவும் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான 'முதல் பருவத்தேர்வு' நாளை தொடக்கம்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் அமலி நகர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினர். அப்போது திருச்செந்தூரில் இருந்து சுமார் 22 கடல் மைல் தொலைவில் கடலில் ஏற்பட்ட சீற்றத்தின் காரணமாக படகு கவிழ்ந்தது.

படகிலிருந்த நான்கு மீனவர்களில் நடுக்கடலில் தத்தளித்த இரண்டு பேரை மற்றொரு படகில் சென்ற மீனவர்கள் மீட்டனர். மேலும் இரண்டு பேரை தேடும் பணி விசைப்படகுகள் மற்றும் 10 பைபர் படகுகள் மூலமாக நடைபெற்றது.

மூன்றாவது நாளாக தேடும் பணி தீவிரம்

அதில் மீனவர்கள் மீட்கப்படாத நிலையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஆதேஷ், அதிராஜ் ஆகிய இரண்டு ரோந்துக் கப்பல்கள் மூலமாகவும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாகவும் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான 'முதல் பருவத்தேர்வு' நாளை தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.