ETV Bharat / state

முதலில் அவங்க தமிழ் பேசட்டும்.. நம்ம அதுக்கு அப்புறம் யோசிக்கலாம் - கனிமொழி

author img

By

Published : Oct 28, 2022, 11:56 AM IST

இந்தியாவில் இருக்க கூடிய எல்லோரும் கற்றுக் கொள்ளக் கூடிய மொழியாகத்தான் தமிழ் உள்ளது எனவும், முதலில் அவங்க தமிழ் பேசட்டும்.. நம்ம அதுக்கு அப்புறம் யோசிக்கலாம்” என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

முதலில் அவங்க தமிழ் பேசட்டும்.. நம்ம அதுக்கு அப்புறம் யோசிக்கலாம் - கனிமொழி பேச்சு
முதலில் அவங்க தமிழ் பேசட்டும்.. நம்ம அதுக்கு அப்புறம் யோசிக்கலாம் - கனிமொழி பேச்சு

தூத்துக்குடி: விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டட வைப்பாற்று ஆற்றுப்படுகையில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, 25 லட்சம் பன விதைகள் நடவு செய்யும் பணி தொடக்க விழா நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு, பன விதைகள் நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய கனிமொழி எம்பி, “தமிழ்நாட்டின் வனப்பரப்பினை 23.8 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உருவாக்கி காட்ட வேண்டும் என்ற உறுதியோடு முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் பிரதிநிதிகள் அவருக்கு உறுதுணையாக இருந்தால் 33% ஏன், அதைவிட அதிகமாக உருவாக்க முடியும். மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக பாடுபட்டு கொண்டிருக்கிறோம்.

25 லட்சம் பன விதைகள் நடவு செய்யும் பணியின் தொடக்க விழா
25 லட்சம் பன விதைகள் நடவு செய்யும் பணியின் தொடக்க விழா

அதுதான் கிடைக்கவில்லை. உள்ளாட்சியில் 50% மகளிருக்கு இட ஒதுக்கீடு கிடைத்து விட்டது. 33%ஐ விட்டுவிட்டு 50% வனப்பரப்பினை உயர்த்த பாடுபடுவோம். முதலமைச்சரின் கனவை நிறைவேற்றும் ‌ வகையில், தூத்துக்குடி மாவட்டத்தை முன்னுதாரணமாக உருவாக்க முடியும்.

ஆக்கக்கூடிய கடவுள் பிரம்மன், காக்கக்கூடிய கடவுள் விஷ்ணு, அழிக்கக்கூடிய கடவுள் சிவன் என்று கூறுவார்கள்.‌ ஆக்கக்கூடிய கடவுளை விட பாதுகாக்கக்கூடிய விஷ்ணுவுக்குத்தான் மரியாதை அதிகம். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரியும் சிவனும் ஒன்று என நம்பக்கூடிய பெரும்பான்மையான மக்கள் இங்கு உள்ளனர்.

கனிமொழி எம்பி பேச்சு

அந்த வகையில் அழிக்கக் கூடியவர்களையும் நாம் அழித்து விடக்கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மரங்களை, சுற்றுப்புறச் சூழலை அழிக்கக் கூடியவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதேபோல் இங்கு இருக்கக்கூடிய மத நல்லிணக்கத்தை, மக்களின் ஒற்றுமையை அழிப்பதற்கும் நிறைய பேர் இருக்கின்றனர்.

அழிக்கக்கூடிய சக்திகளில் எல்லாம் நாம் விட்டு விடக்கூடாது என்பதை உறுதியோடு புரிந்து கொள்ள வேண்டும். மக்களை ஒற்றுமைப்படுத்தக்கூடிய இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். குழந்தைகளுக்கு வீடு, இடம் வாங்குவதை விட ஒரு மரத்தை விட்டுச் சென்றால், மண்ணும் வீடும் பத்திரமாக இருக்கும்.

முன்பு எப்போது மழை பெய்யும், வெயில் அடிக்கும் என்று கூறி விட முடியும். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. தமிழைக் கற்றுக் கொள்வதில் கஷ்டம் இல்லை. இந்தியாவில் இருக்க கூடிய எல்லோரும் கற்றுக் கொள்ளக் கூடிய மொழியாகத்தான் தமிழ் உள்ளது.

அவங்க தமிழ் பேசட்டும். நம்ம அதற்கு அப்புறம் யோசிக்கலாம். நாங்க மட்டும் ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் உட்கார்ந்து இருப்பீர்கள் என்ற நிலை இருக்கக்கூடாது” என்றார்.

இதையும் படிங்க: இந்தி படித்தால் வாய் பேச முடியாத அடிமைகளாக செல்ல நேரிடும் - கவிஞர் வைரமுத்து

தூத்துக்குடி: விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டட வைப்பாற்று ஆற்றுப்படுகையில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, 25 லட்சம் பன விதைகள் நடவு செய்யும் பணி தொடக்க விழா நடைபெற்றது. இதில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு, பன விதைகள் நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் பேசிய கனிமொழி எம்பி, “தமிழ்நாட்டின் வனப்பரப்பினை 23.8 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உருவாக்கி காட்ட வேண்டும் என்ற உறுதியோடு முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் பிரதிநிதிகள் அவருக்கு உறுதுணையாக இருந்தால் 33% ஏன், அதைவிட அதிகமாக உருவாக்க முடியும். மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக பாடுபட்டு கொண்டிருக்கிறோம்.

25 லட்சம் பன விதைகள் நடவு செய்யும் பணியின் தொடக்க விழா
25 லட்சம் பன விதைகள் நடவு செய்யும் பணியின் தொடக்க விழா

அதுதான் கிடைக்கவில்லை. உள்ளாட்சியில் 50% மகளிருக்கு இட ஒதுக்கீடு கிடைத்து விட்டது. 33%ஐ விட்டுவிட்டு 50% வனப்பரப்பினை உயர்த்த பாடுபடுவோம். முதலமைச்சரின் கனவை நிறைவேற்றும் ‌ வகையில், தூத்துக்குடி மாவட்டத்தை முன்னுதாரணமாக உருவாக்க முடியும்.

ஆக்கக்கூடிய கடவுள் பிரம்மன், காக்கக்கூடிய கடவுள் விஷ்ணு, அழிக்கக்கூடிய கடவுள் சிவன் என்று கூறுவார்கள்.‌ ஆக்கக்கூடிய கடவுளை விட பாதுகாக்கக்கூடிய விஷ்ணுவுக்குத்தான் மரியாதை அதிகம். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரியும் சிவனும் ஒன்று என நம்பக்கூடிய பெரும்பான்மையான மக்கள் இங்கு உள்ளனர்.

கனிமொழி எம்பி பேச்சு

அந்த வகையில் அழிக்கக் கூடியவர்களையும் நாம் அழித்து விடக்கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மரங்களை, சுற்றுப்புறச் சூழலை அழிக்கக் கூடியவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதேபோல் இங்கு இருக்கக்கூடிய மத நல்லிணக்கத்தை, மக்களின் ஒற்றுமையை அழிப்பதற்கும் நிறைய பேர் இருக்கின்றனர்.

அழிக்கக்கூடிய சக்திகளில் எல்லாம் நாம் விட்டு விடக்கூடாது என்பதை உறுதியோடு புரிந்து கொள்ள வேண்டும். மக்களை ஒற்றுமைப்படுத்தக்கூடிய இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். குழந்தைகளுக்கு வீடு, இடம் வாங்குவதை விட ஒரு மரத்தை விட்டுச் சென்றால், மண்ணும் வீடும் பத்திரமாக இருக்கும்.

முன்பு எப்போது மழை பெய்யும், வெயில் அடிக்கும் என்று கூறி விட முடியும். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. தமிழைக் கற்றுக் கொள்வதில் கஷ்டம் இல்லை. இந்தியாவில் இருக்க கூடிய எல்லோரும் கற்றுக் கொள்ளக் கூடிய மொழியாகத்தான் தமிழ் உள்ளது.

அவங்க தமிழ் பேசட்டும். நம்ம அதற்கு அப்புறம் யோசிக்கலாம். நாங்க மட்டும் ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் உட்கார்ந்து இருப்பீர்கள் என்ற நிலை இருக்கக்கூடாது” என்றார்.

இதையும் படிங்க: இந்தி படித்தால் வாய் பேச முடியாத அடிமைகளாக செல்ல நேரிடும் - கவிஞர் வைரமுத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.