ETV Bharat / state

’ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மக்கள் கருத்து தேவையில்லை என்பது வருந்தத்தக்கது’

author img

By

Published : Jan 20, 2020, 1:33 PM IST

தூத்துக்குடி: ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மக்கள் கருத்து தேவையில்லை என்று மத்திய அரசு கூறியது வருந்தத்தக்கது என மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

kanimozhi MP sad about hydrocarbon project does not require public opinion
kanimozhi MP sad about hydrocarbon project does not require public opinion

மக்களவைத் தொகுதி உறுப்பினரான கனிமொழி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தொடர்ந்து மக்கள் வலுவாக எதிர்த்துவருகின்றனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்தை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும்கூட அரசு மக்களுடைய கருத்துகள் அவசியமில்லை என்று கூறியிருக்கிறது.

சுற்றுச்சூழலைப் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை என்ற ஒரு முடிவை எடுத்து அரசு அறிக்கை வெளியிட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. விவசாயிகளையும் விவசாயத்தையும் முற்றிலுமாகத் தமிழ்நாட்டில் அழித்துவிடக்கூடிய திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து ஏன் கொண்டுவருகிறது என்பது புரியவில்லை. ஹைட்ரோகார்பன் திட்டம் தமிழ்நாட்டிற்கு எதிரான நடவடிக்கை.

கனிமொழி பேட்டி

நாட்டையே தனியார்மயம் ஆக்குவதற்கான முயற்சிகள் போய்க்கொண்டிருக்கின்றன. அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களையும் மத்திய அரசு தனியார் வசம் ஒப்படைக்கும் சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பல லட்சக்கணக்கானவர்கள் வேலைசெய்யக்கூடிய ரயில்வே துறையை தனியார்மயமாக்கினால் ரயில்வே தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்படும்” என்றார்.

இதையும் படிங்க: 'புதிய விஞ்ஞானியாக அமைச்சர் ஜெயக்குமார் உருவெடுத்துள்ளார்' - கலகலத்த கே.எஸ். அழகிரி

மக்களவைத் தொகுதி உறுப்பினரான கனிமொழி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஹைட்ரோகார்பன் திட்டத்தைத் தொடர்ந்து மக்கள் வலுவாக எதிர்த்துவருகின்றனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்தை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும்கூட அரசு மக்களுடைய கருத்துகள் அவசியமில்லை என்று கூறியிருக்கிறது.

சுற்றுச்சூழலைப் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை என்ற ஒரு முடிவை எடுத்து அரசு அறிக்கை வெளியிட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. விவசாயிகளையும் விவசாயத்தையும் முற்றிலுமாகத் தமிழ்நாட்டில் அழித்துவிடக்கூடிய திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து ஏன் கொண்டுவருகிறது என்பது புரியவில்லை. ஹைட்ரோகார்பன் திட்டம் தமிழ்நாட்டிற்கு எதிரான நடவடிக்கை.

கனிமொழி பேட்டி

நாட்டையே தனியார்மயம் ஆக்குவதற்கான முயற்சிகள் போய்க்கொண்டிருக்கின்றன. அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களையும் மத்திய அரசு தனியார் வசம் ஒப்படைக்கும் சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பல லட்சக்கணக்கானவர்கள் வேலைசெய்யக்கூடிய ரயில்வே துறையை தனியார்மயமாக்கினால் ரயில்வே தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்படும்” என்றார்.

இதையும் படிங்க: 'புதிய விஞ்ஞானியாக அமைச்சர் ஜெயக்குமார் உருவெடுத்துள்ளார்' - கலகலத்த கே.எஸ். அழகிரி

Intro:ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மக்கள் கருத்து தேவையில்லை என்பது வருந்தத்தக்கது - கனிமொழி எம்பி பேட்டி.

Body:ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மக்கள் கருத்து தேவையில்லை என்பது வருந்தத்தக்கது - கனிமொழி எம்பி பேட்டி.

தூத்துக்குடி


நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினருமான கனிமொழி இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து விமான நிலையத்தில் அவர், செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில்,
ஹைட்ரோகார்பன் திட்டத்தை தொடர்ந்து மக்கள் வலுவாக எதிர்த்து வருகின்றனர். எல்லா எதிர்க்கட்சிகளும் இத்திட்டதை எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட அரசாங்கம் மக்களுடைய கருத்துக்களை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடிய அவசியமில்லை, சுற்றுச் சூழலைப் பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை என்ற ஒரு முடிவை எடுத்து அறிக்கை வெளியிட்டு இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. விவசாயிகளை, விவசாயத்தை முற்றிலுமாக தமிழ்நாட்டில் அழித்துவிடக் கூடிய திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து ஏன் கொண்டு வருகிறார்கள் என்பது புரியவில்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கிறோம்.

தொடர்ந்து, அதிமுக ஆட்சிக்காலத்தில் திருவள்ளுவர் சிலையை பராமரிக்க கூடாது என்பதையே வழக்கமாக்கியுள்ளனர். திருவள்ளுவர் சிலையை பராமரிக்கவேண்டும் என்பதை ஒவ்வொரு முறையும் ஆர்ப்பாட்டம், கண்டன அறிக்கை, கண்டன கூட்டம் நடத்தியும் எடுத்துக் சொல்ல வேண்டியதாயிருக்கிறது.
இந்த ஆட்சியில், விவேகானந்தர் மீது இருக்கக் கூடிய அக்கறையை தமிழர்களுக்கு மிக முக்கியமாக இருக்க கூடிய திருவள்ளுவருக்கு காட்டவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.
சுப்பிரமணிய சாமியின் கருத்துகளுக்கு பதில் கூற வேண்டியதில்லை. உள்கட்சி பூசலில் அவர்கூறும் கருத்துகளுக்கு பதில் சொல்லவேண்டியதில்லை. நாட்டையே தனியார்மயம் ஆக்குவதற்கான முயற்சிகள் போய்க்கொண்டிருக்கிறது. எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் மத்திய அரசு தனியார்மயம் வசம் ஒப்படைக்கும் சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பல லட்சக்கணக்கானவர்கள் வேலை செய்யக்கூடிய ரெயில்வே துறையை தனியார் மயமாக்கினால் ரெயில்வே தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையை நாம் சந்திக்கக்கூடும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.