தூத்துக்குடி: திருச்செந்தூரில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்று வரும் நிலையில், பக்தர்களுக்கு செய்யப்பட்ட அடிப்படை வசதிகள், முன்னேற்பாடுகள் குறித்து நேற்று (நவ.16) கனிமொழி எம்.பி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கி, வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பக்தர்கள் தங்குவதற்கான தற்காலிக கூடம், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள், அன்னதானக் கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி உள்பட பலர் இருந்தனர்.
-
திருச்செந்தூரில் நடைபெறவுள்ள கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் தங்குவதற்கான தற்காலிகக் கூடம், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள், அன்னதான கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, இன்று நேரில் சென்று பார்வையிட்டோம்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
அமைச்சர் திரு. @ARROffice, மாவட்ட ஆட்சியர்… pic.twitter.com/wcgcuDkSml
">திருச்செந்தூரில் நடைபெறவுள்ள கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் தங்குவதற்கான தற்காலிகக் கூடம், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள், அன்னதான கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, இன்று நேரில் சென்று பார்வையிட்டோம்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 16, 2023
அமைச்சர் திரு. @ARROffice, மாவட்ட ஆட்சியர்… pic.twitter.com/wcgcuDkSmlதிருச்செந்தூரில் நடைபெறவுள்ள கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் தங்குவதற்கான தற்காலிகக் கூடம், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள், அன்னதான கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, இன்று நேரில் சென்று பார்வையிட்டோம்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 16, 2023
அமைச்சர் திரு. @ARROffice, மாவட்ட ஆட்சியர்… pic.twitter.com/wcgcuDkSml
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து கனிமொழி எம்.பி பேசியதாவது, “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், கந்த சஷ்டி திருவிழா, பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நடைபெறக்கூடிய மிகப்பெரிய விழாவாகும். இந்த ஆண்டு சுமார் 10 லட்சம் பக்தர்கள் இந்த கந்த சஷ்டி திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவரை கிட்டத்தட்ட மூன்று லட்சம் பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து சென்றுள்ளனர். 20 ஆயிரத்திற்கும் மேலான பக்தர்கள் அன்னதானக் கூடத்தில் அமர்ந்து உணவு அருந்தியுள்ளனர்.