ETV Bharat / state

'வெள்ளப் பிரச்னைகளைத் தீர்க்காத அரசுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்' - சீறிய கனிமொழி!

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முன்வராத ஆட்சியாளர்களுக்கு, வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

author img

By

Published : Dec 2, 2019, 5:20 PM IST

kanimozhi inspection on flood place at thoothukudi
kanimozhi inspection on flood place at thoothukudi

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம்போல் வீடுகளைச் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நேற்று நேரில் சென்று பார்வையிட்டிருந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பைப் பார்வையிட்டார்.

அப்போது பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசிய கனிமொழி, மழை வெள்ளத்தை வெளியேற்ற மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக ஆறுதல் கூறினார்.

வெள்ளத்தால் சூழ்ந்துள்ள பகுதிகள்
வெள்ளத்தால் சூழ்ந்துள்ள பகுதிகள்

பின்னர் செய்தியாளரைச் சந்தித்து பேசிய அவர், '' உள்ளாட்சித் தேர்தல் நடப்பது வரவேற்கத்தக்க நிகழ்வு. தேர்தல் நடக்க வேண்டும் என்று தான் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இன்னமும் பல குழப்பங்கள் உள்ளதால், அவற்றைச் சரிசெய்து விட்டு தேர்தலை அறிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

மழையால் தமிழ்நாட்டில் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவ்வளவு மழை பெய்தும் மழை நீர் அனைத்தும் வீணாகக் கடலில் கலப்பது கவலையளிக்கிறது. இதற்கென்று அரசாங்கம் எந்தத் தீர்வும் செய்யவில்லை. தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்றுவதில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை. நீர் சீராக பாய்வதற்கு, வாய்க்கால்களைக் கூட சரியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வில்லை. தமிழ்நாடு முழுவதும் இதே நிலைமைதான் உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆறுதல் கூறும் கனிமொழி எம்.பி.

பாதிக்கப்பட்ட மக்களை அரசாங்கமோ, அமைச்சர்களோ நேரில் வந்து சந்திக்கவில்லை. மக்களின் குறைகளைச் சரி செய்வதற்கும் பிரச்னைகளை தீர்ப்பதற்கும் அவர்கள் தயாராக இல்லை என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் '' என்றார்.

இதையும் படிங்க: கடலூரில் சுவர் இடிந்து உயிரிழந்த குடும்பத்திற்கு ஸ்டாலின் நிதி உதவி!

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம்போல் வீடுகளைச் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை நேற்று நேரில் சென்று பார்வையிட்டிருந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பைப் பார்வையிட்டார்.

அப்போது பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசிய கனிமொழி, மழை வெள்ளத்தை வெளியேற்ற மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக ஆறுதல் கூறினார்.

வெள்ளத்தால் சூழ்ந்துள்ள பகுதிகள்
வெள்ளத்தால் சூழ்ந்துள்ள பகுதிகள்

பின்னர் செய்தியாளரைச் சந்தித்து பேசிய அவர், '' உள்ளாட்சித் தேர்தல் நடப்பது வரவேற்கத்தக்க நிகழ்வு. தேர்தல் நடக்க வேண்டும் என்று தான் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இன்னமும் பல குழப்பங்கள் உள்ளதால், அவற்றைச் சரிசெய்து விட்டு தேர்தலை அறிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

மழையால் தமிழ்நாட்டில் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவ்வளவு மழை பெய்தும் மழை நீர் அனைத்தும் வீணாகக் கடலில் கலப்பது கவலையளிக்கிறது. இதற்கென்று அரசாங்கம் எந்தத் தீர்வும் செய்யவில்லை. தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்றுவதில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை. நீர் சீராக பாய்வதற்கு, வாய்க்கால்களைக் கூட சரியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வில்லை. தமிழ்நாடு முழுவதும் இதே நிலைமைதான் உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆறுதல் கூறும் கனிமொழி எம்.பி.

பாதிக்கப்பட்ட மக்களை அரசாங்கமோ, அமைச்சர்களோ நேரில் வந்து சந்திக்கவில்லை. மக்களின் குறைகளைச் சரி செய்வதற்கும் பிரச்னைகளை தீர்ப்பதற்கும் அவர்கள் தயாராக இல்லை என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் '' என்றார்.

இதையும் படிங்க: கடலூரில் சுவர் இடிந்து உயிரிழந்த குடும்பத்திற்கு ஸ்டாலின் நிதி உதவி!

Intro:மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வராத ஆட்சியாளர்களுக்கு வாக்காளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்- கனிமொழி எம்பி பேட்டி
Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம்போல் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2-வது நாளாக, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்ப்பட்ட முத்தையாபுரத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மழை வெள்ளத்தை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் ஆறுதல் கூறினார்.

இதைத் தொடர்ந்து,ஸ்டேட் பாங்க் காலனி, அன்னை இந்திரா நகர், தனசேகரன் நகர் உள்ளிட்ட இடங்களிலும் மழைவெள்ள பாதிப்பை பார்வையிட்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில்,

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடப்பது என்பது வரவேற்கத்தக்க ஒன்று. உள்ளாட்சி தேர்தல் நடக்க வேண்டும் என்றுதான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இன்னமும் பல குழப்பங்கள் உள்ளது. அதை சரி செய்து விட்டு தேர்தல் அறிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

மழையால் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக இவ்வளவு மழை பெய்தும் மழைநீர் அணைத்தும் வீணாக கடலில் தான் கலக்கிறது. இதற்கு அரசாங்கம் எந்த தீர்வும் காணவில்லை.

தூத்துக்குடியில் பல பகுதிகளில் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீரை வெளியேற்றுவதில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தவில்லை. தண்ணீர் வரத்து வாய்க்கால்களை கூட சரியாக தூர்வார நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் இதே நிலைமைதான் உள்ளது.

தூத்துக்குடியிலும் பல இடங்களில் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. வீடுகளில் தண்ணீர் புகுந்து நிற்பதால் பாதிக்கப்பட்ட மக்களை அரசாங்கமோ, அமைச்சர்களோ மக்களை வந்து சந்திக்கவில்லை. அவர்களின் குறைகளை சரி செய்வதற்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் அவர்கள் தயாராக இல்லை என்பதை கண்கூடாக பார்க்கிறோம். மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.