ETV Bharat / state

தேவேந்திரகுல வேளாளர் அரசாணை வெளியிட்டபிறகே ஆதரவு - ஜான் பாண்டியன்

author img

By

Published : Oct 12, 2019, 2:35 PM IST

தூத்துக்குடி: தேவேந்திரகுல வேளாளர் அரசாணை கிடைக்கும் வரை தேர்தலில் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை தெரிவிக்க இயலாது என ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

john pandian

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் “தேவேந்திரகுல வேளாளர் அரசாணையை அரசு வெளியிட வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட ஐவர் குழுவுடன் வருகிற 16ஆம் தேதி நாங்கள் ஆலோசனை நடத்தவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன்

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேவேந்திரகுல வேளாளர் அரசாணை என்பதுதான் எங்களது முக்கிய நோக்கு. அது கிடைத்த பின்னரே ஆதரவா? இல்லையா? என்பதை எங்களால் சொல்ல முடியும் அதுவரை அமைதி காப்பேன் என ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் “தேவேந்திரகுல வேளாளர் அரசாணையை அரசு வெளியிட வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட ஐவர் குழுவுடன் வருகிற 16ஆம் தேதி நாங்கள் ஆலோசனை நடத்தவுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன்

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேவேந்திரகுல வேளாளர் அரசாணை என்பதுதான் எங்களது முக்கிய நோக்கு. அது கிடைத்த பின்னரே ஆதரவா? இல்லையா? என்பதை எங்களால் சொல்ல முடியும் அதுவரை அமைதி காப்பேன் என ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

Intro:தேவேந்திர குல வேளாளர் அரசாணை கிடைக்கும் வரை தேர்தலில் ஆதரவு என்றநிலைப்பாட்டை தெரிவிக்க இயலாது - தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் பேட்டிBody:
தூத்துக்குடி


சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது இடைத்தேர்தல் முடிவு என்பதை இனிமேல்தான் அறிவிக்கப்படும். முதலில் தேவேந்திரகுல வேளாளர் எங்களுக்கு அரசாணை வெளியிடப்பட வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட ஐவர் குழுவுடன் வருகிற 16ம் தேதி நாங்கள் ஆலோசனை நடத்தவுள்ளோம். அதற்கு பிறகே எதையும் சொல்ல முடியும்.
இதற்கு முன்னர் ஐவர் குழுவுடன் ஆலோசனை நடத்த எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது இவர்களுடன் சந்தித்து பேசுவதற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஆகவே 16ஆம் தேதி காலையில் தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிடுவது தொடர்பாக ஐவர் குழுவை சந்தித்து பேச இருக்கிறோம். இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு,
தேவேந்திரகுல வேளாளர் அரசாணை என்பதுதான் எங்களது முக்கிய நோக்கு. அது கிடைத்த பின்பே ஆதரவா? இல்லையா என்பதை எங்களால் சொல்ல முடியும் என்றார்.

இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு இருக்கும் என நினைக்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேர்தல் களத்தில் தற்போது வரையில் நான் பங்கெடுக்கவில்லை. ஆகவே அது குறித்து என்னால் கூற இயலாது என பதிலளித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.