ETV Bharat / state

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் - மீனவ கிராமங்களில் விளக்கக் கூட்டம்!

author img

By

Published : Nov 8, 2020, 9:09 PM IST

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது தொடா்பாக நிபுணா்கள் மூலம் மீனவக் கிராமங்களில் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி கூறினார்.

ராக்கெட் ஏவுதளம்
ராக்கெட் ஏவுதளம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மீனவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவப் பிரதிநிதிகளுடனான பேச்சுவாா்த்தையில் ஆட்சியா் சந்தீப் நந்தூரி பேசுகையில், "தூத்துக்குடிக்கு முதலமைச்சர் வருகையின்போது மீனவ கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூண்டில் வளைவுகள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை அறிவிக்கவுள்ளாா்.

மேலும், ராக்கெட் ஏவுதளம் மீனவ மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதால், அவா்களின் அச்சத்தை போக்கும் வகையில், அந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவா்களை வைத்து எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விளக்க கூட்டம் விரைவில் நடத்தப்படும். இதுதவிர, ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் அருகே உள்ள மீனவ கிராமங்களிலிருந்தும் மீனவா்களை அழைத்து வந்து அவா்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளதை விரிவாக நம் பகுதி மீனவா்களுக்கு விளக்கப்படும்.

இது தொடா்பாக மீனவ மக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. உடன்குடியில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின்நிலையத்தின் 50 விழுக்காடு பணிகள் முடிந்துவிட்டன. அந்த பகுதியில் மீன்பிடி உபகரணத்துக்கு ஏற்பட்ட சேதாரத்துக்கு இழப்பீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது.

இதுபோன்ற வளா்ச்சித் திட்டங்களால் அப்பகுதி மீனவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும். அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் வளா்ச்சி அடையும். மேலும், மீனவ கிராமங்களில் உள்ள படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தர மாவட்ட நிா்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றாா்.

இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை: தி.நகரில் அலைமோதும் பொதுமக்கள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என மீனவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மீனவப் பிரதிநிதிகளுடனான பேச்சுவாா்த்தையில் ஆட்சியா் சந்தீப் நந்தூரி பேசுகையில், "தூத்துக்குடிக்கு முதலமைச்சர் வருகையின்போது மீனவ கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூண்டில் வளைவுகள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை அறிவிக்கவுள்ளாா்.

மேலும், ராக்கெட் ஏவுதளம் மீனவ மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதால், அவா்களின் அச்சத்தை போக்கும் வகையில், அந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவா்களை வைத்து எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விளக்க கூட்டம் விரைவில் நடத்தப்படும். இதுதவிர, ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் அருகே உள்ள மீனவ கிராமங்களிலிருந்தும் மீனவா்களை அழைத்து வந்து அவா்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளதை விரிவாக நம் பகுதி மீனவா்களுக்கு விளக்கப்படும்.

இது தொடா்பாக மீனவ மக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. உடன்குடியில் அமைக்கப்பட்டு வரும் அனல் மின்நிலையத்தின் 50 விழுக்காடு பணிகள் முடிந்துவிட்டன. அந்த பகுதியில் மீன்பிடி உபகரணத்துக்கு ஏற்பட்ட சேதாரத்துக்கு இழப்பீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது.

இதுபோன்ற வளா்ச்சித் திட்டங்களால் அப்பகுதி மீனவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும். அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் வளா்ச்சி அடையும். மேலும், மீனவ கிராமங்களில் உள்ள படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தர மாவட்ட நிா்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றாா்.

இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை: தி.நகரில் அலைமோதும் பொதுமக்கள் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.