ETV Bharat / state

Erode by poll: அதிமுக கூட்டணி வெற்றி மிகப்பிரகாசமாக உள்ளது - ஜி.கே.வாசன்

author img

By

Published : Jan 28, 2023, 8:45 AM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றி மிகப்பிரகாசமாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

Erode by poll: அதிமுக கூட்டணி வெற்றி மிகப்பிரகாசமாக உள்ளது - ஜி.கே.வாசன் நம்பிக்கை
Erode by poll: அதிமுக கூட்டணி வெற்றி மிகப்பிரகாசமாக உள்ளது - ஜி.கே.வாசன் நம்பிக்கை

தூத்துக்குடி: கோவில்பட்டியில் உள்ள கம்மவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 39ஆவது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சி, யோகா போட்டி, சிலம்பாட்ட போட்டிகள் ஆகியவை நடைபெற்றது‌. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்திப்பு

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு கிடப்பில் போட்டுள்ளது. மனிதாபிமான பிரச்னைகளில்கூட முடிவெடுக்காத அரசாக, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காத அரசாக திமுக அரசு செயல்படுகிறது.

பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக ஏற்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி மிகப்பிரகாசமாக உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வெற்றி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதிமுக கூட்டணியை ஆதரிக்கக் கூடிய கட்சிகள் உரிய காலக்கெடுவுக்குள் அதிகாரப்பூர்வமாக ஆதரிப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. திமுக ஆட்சி, மக்கள் விரோதப் போக்கை கடைபிடிக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பியிருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக, இந்தியாவிலேயே முதல் வரிசையில் அமரக்கூடிய தகுதியை இந்த ஆட்சி பெற்றிருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் எதிர்மறையான ஓட்டுக்கள் அதிகரித்து வருகிறது. அதுவே எங்கள் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்” என்றார்.

இதையும் படிங்க: இடைத்தேர்தலை ஒரு சாக்கடை என்றவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் - டிடிவி தினகரன்

தூத்துக்குடி: கோவில்பட்டியில் உள்ள கம்மவர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 39ஆவது விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சி, யோகா போட்டி, சிலம்பாட்ட போட்டிகள் ஆகியவை நடைபெற்றது‌. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்திப்பு

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு கிடப்பில் போட்டுள்ளது. மனிதாபிமான பிரச்னைகளில்கூட முடிவெடுக்காத அரசாக, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காத அரசாக திமுக அரசு செயல்படுகிறது.

பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக ஏற்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி மிகப்பிரகாசமாக உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வெற்றி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதிமுக கூட்டணியை ஆதரிக்கக் கூடிய கட்சிகள் உரிய காலக்கெடுவுக்குள் அதிகாரப்பூர்வமாக ஆதரிப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. திமுக ஆட்சி, மக்கள் விரோதப் போக்கை கடைபிடிக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பியிருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக, இந்தியாவிலேயே முதல் வரிசையில் அமரக்கூடிய தகுதியை இந்த ஆட்சி பெற்றிருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் எதிர்மறையான ஓட்டுக்கள் அதிகரித்து வருகிறது. அதுவே எங்கள் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்” என்றார்.

இதையும் படிங்க: இடைத்தேர்தலை ஒரு சாக்கடை என்றவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் - டிடிவி தினகரன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.