ETV Bharat / state

முன்னாள் அதிமுக அமைச்சர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! அதிர்ச்சியில் அதிமுகவினர்..

Former Minister Chellappandian who defamed the CM: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை பொதுவெளியில் இழிவாக பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 3:42 PM IST

Former Minister Chellappandian defamed the CM
முன்னாள் அதிமுக அமைச்சர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
முன்னாள் அதிமுக அமைச்சர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதுமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி அதிமுகவின் சார்பில் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் நேற்றைய தினம் (செப் 16) விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் தலைமையில், பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் மதுரை அதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற வருகை தந்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் பொதுமக்கள் மற்றும் கட்சியினரிடம் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி, தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி உள்பட ஒட்டுமொத்தமாக முதலமைச்சரின் குடும்பத்தினரை பொதுவெளியில் மிகவும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி இழிவாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து விளாத்திகுளம் தொகுதியைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

திமுகவினர் அளித்த புகாரின் பேரின், விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(B), 153(A) மற்றும் 505(2) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவம் தற்போது அதிமுகவினரின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வேலூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்... எங்கெல்லாம் செல்கிறார் தெரியுமா?

முன்னாள் அதிமுக அமைச்சர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

தூத்துக்குடி: தமிழ்நாடு முழுவதுமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி அதிமுகவின் சார்பில் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் நேற்றைய தினம் (செப் 16) விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் தலைமையில், பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் மதுரை அதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற வருகை தந்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் பொதுமக்கள் மற்றும் கட்சியினரிடம் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி, தூத்துக்குடி எம்பி கனிமொழி கருணாநிதி உள்பட ஒட்டுமொத்தமாக முதலமைச்சரின் குடும்பத்தினரை பொதுவெளியில் மிகவும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி இழிவாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்து விளாத்திகுளம் தொகுதியைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

திமுகவினர் அளித்த புகாரின் பேரின், விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(B), 153(A) மற்றும் 505(2) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவம் தற்போது அதிமுகவினரின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வேலூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்... எங்கெல்லாம் செல்கிறார் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.