ETV Bharat / state

மழைநீரில் மீன்பிடித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நூதனப் போராட்டம்!

author img

By

Published : Nov 19, 2019, 1:59 AM IST

தூத்துக்குடி: குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மழைநீரில் மீன்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CPI(M) party members Protest against Thoothukudi Corporation

தூத்துக்குடியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனிடையே, சனிக்கிழமை மீண்டும் கனமழை பெய்தது.

இந்த மழையால் பள்ளமான பகுதிகளில் கூடுதலாக மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாசிலாமணிபுரம் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் மீன்பிடித்தும், துணி துவைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

சிபிஐ கட்சியினர் போரட்டம்

இதையும் படிங்க: காவல் நிலையம் அருகே மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி - திருவாரூரில் பரபரப்பு!

தூத்துக்குடியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனிடையே, சனிக்கிழமை மீண்டும் கனமழை பெய்தது.

இந்த மழையால் பள்ளமான பகுதிகளில் கூடுதலாக மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாசிலாமணிபுரம் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் மீன்பிடித்தும், துணி துவைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

சிபிஐ கட்சியினர் போரட்டம்

இதையும் படிங்க: காவல் நிலையம் அருகே மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளி - திருவாரூரில் பரபரப்பு!

Intro:தூத்துக்குடி மாநகர் பகுதியில் மழைநீர் தேக்கம்- தேங்கிய மழைநீரில் மீன்பிடித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்

Body:

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. இதனால் தூத்துக்குடி நகரில் பலபகுதிகளில் மழைநீர் வெள்ளம் தேங்கி உள்ளது. இதனால் கொசுகள் உற்பத்தியாகி தொற்றுநோய் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன் தினம் மீண்டும் கனமழை பெய்தது.

பள்ளமான பகுதிகளில் கூடுதலாக மழைவெள்ளம் தேங்கியது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டுவெளியில் வரமுடியாத நிலை ஏற்ப்பட்டது.

இந்த நிலையில் மழைநீரை அகற்றாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாசிலாமணி புரம் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரில் மீன்பிடித்து, துணி துவைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் செயலாளர் தா.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.


பேட்டி :ராஜா - மாநகர செயலாளர் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.