ETV Bharat / state

காதலுக்கு போட்டி - நண்பரை கொலை செய்த சிறுவன் கைது

author img

By

Published : Aug 2, 2021, 10:36 PM IST

கோவில்பட்டியில் காதலுக்கு போட்டியாக இருந்த நண்பரை வெட்டி கொலை செய்த சிறுவனை காவல் துறையினர் கைது செய்தனர்.

நண்பரை கொலை செய்த சிறுவன் கைது
நண்பரை கொலை செய்த சிறுவன் கைது

தூத்துக்குடி: மாவட்டம் கோவில்பட்டி ஸ்டாலின் காலனி பகுதியை சேர்ந்த பொய்யாழி என்பவரது மகன் மதன்குமார் (22) மந்திதோப்பு பாண்டவர்மங்கலம் குளத்துகரையில் ஜூலை 29ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.

தனிப்படை அமைப்பு

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

தீவிர விசாரணை

தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தீத்தாம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன் மதன்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.

விசாரணையில், சிறுவனும் மதன்குமாரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் சிறுவன், தன்னுடைய காதலுக்கு மதன்குமார் இடையூறாக இருப்பதாக கருதி தீர்த்துக்கட்டிவிடலாம் என்று திட்டமிட்டுள்ளார். காட்டுப்பகுதியில் அரிவாளை மறைத்து வைத்துவிட்டு, மதன்குமாரை மது அருந்துவதற்கு சிறுவன் அழைத்துள்ளார்.

இதுதெரியாமல் மதன்குமாரும் சம்பவ இடத்திற்கு வந்தள்ளார். அப்போது சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, மதன்குமாரை கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார். தொடர்ந்து அந்த அரிவாளை அருகிலுள்ள குளத்தில் போட்டு சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.

சிறுவன் கைது

பின்பு தனிப்படையினர் சிறுவனை கைது செய்து, சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று குளத்திலிருந்து அரிவாளை கைப்பற்றினர்.

தனிப்படைக்கு பாராட்டு

இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: மதுரையில் மாமனாரை நடுரோட்டில் விரட்டி வெட்டிய மருமகன் - அதிர்ச்சி வீடியோ

தூத்துக்குடி: மாவட்டம் கோவில்பட்டி ஸ்டாலின் காலனி பகுதியை சேர்ந்த பொய்யாழி என்பவரது மகன் மதன்குமார் (22) மந்திதோப்பு பாண்டவர்மங்கலம் குளத்துகரையில் ஜூலை 29ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.

தனிப்படை அமைப்பு

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

தீவிர விசாரணை

தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தீத்தாம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன் மதன்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.

விசாரணையில், சிறுவனும் மதன்குமாரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனால் சிறுவன், தன்னுடைய காதலுக்கு மதன்குமார் இடையூறாக இருப்பதாக கருதி தீர்த்துக்கட்டிவிடலாம் என்று திட்டமிட்டுள்ளார். காட்டுப்பகுதியில் அரிவாளை மறைத்து வைத்துவிட்டு, மதன்குமாரை மது அருந்துவதற்கு சிறுவன் அழைத்துள்ளார்.

இதுதெரியாமல் மதன்குமாரும் சம்பவ இடத்திற்கு வந்தள்ளார். அப்போது சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, மதன்குமாரை கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார். தொடர்ந்து அந்த அரிவாளை அருகிலுள்ள குளத்தில் போட்டு சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.

சிறுவன் கைது

பின்பு தனிப்படையினர் சிறுவனை கைது செய்து, சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று குளத்திலிருந்து அரிவாளை கைப்பற்றினர்.

தனிப்படைக்கு பாராட்டு

இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: மதுரையில் மாமனாரை நடுரோட்டில் விரட்டி வெட்டிய மருமகன் - அதிர்ச்சி வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.