ETV Bharat / state

பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு ஜாமீன் : எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட தாய்-மகள் தீக்குளிப்பு முயற்சி

author img

By

Published : Dec 28, 2020, 5:39 PM IST

தூத்துகுடி : தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை பிணையில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட மகளுடன் தாயும் தீக்குளிக்க முயன்றுள்ளனர்.

Attempt to set fire to mother-daughter in protest of sexual harassment
Attempt to set fire to mother-daughter in protest of sexual harassment

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள அயன் பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனியம்மாள்-சோலைபெருமாள் தம்பதியினர். கூலித் தொழிலாளர்களான இவர்கள் இருவரும் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்ற வாலிபர் இவர்களது 14 வயது மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் அவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலையத்தினர் அளித்த புகாரின் பேரில் ஐயப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது சிறையில் இருக்கும் ஐயப்பனை பிணையில் எடுப்பதற்கு அவரது உறவினர்கள் முயன்று வருகின்றனர்.

தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி

இந்நிலையில், ஐயப்பன் சிறையிலிருந்து வெளியே வந்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும், எனவே அவரை சிறையில் இருந்து வெளியே விடக்கூடாது எனக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமியுடன் வந்த அவரது தாயார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். இதனைக் காவல் துறையினர் தடுத்து, தாய் மகள் இருவரையும் மீட்டு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: தீக்குளிக்க முயன்ற மூதாட்டிகள்... முதியவர்களை வஞ்சிக்கும் சொத்து

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள அயன் பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனியம்மாள்-சோலைபெருமாள் தம்பதியினர். கூலித் தொழிலாளர்களான இவர்கள் இருவரும் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்ற வாலிபர் இவர்களது 14 வயது மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் அவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலையத்தினர் அளித்த புகாரின் பேரில் ஐயப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது சிறையில் இருக்கும் ஐயப்பனை பிணையில் எடுப்பதற்கு அவரது உறவினர்கள் முயன்று வருகின்றனர்.

தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி

இந்நிலையில், ஐயப்பன் சிறையிலிருந்து வெளியே வந்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும், எனவே அவரை சிறையில் இருந்து வெளியே விடக்கூடாது எனக் கோரி பாதிக்கப்பட்ட சிறுமியுடன் வந்த அவரது தாயார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். இதனைக் காவல் துறையினர் தடுத்து, தாய் மகள் இருவரையும் மீட்டு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: தீக்குளிக்க முயன்ற மூதாட்டிகள்... முதியவர்களை வஞ்சிக்கும் சொத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.