ETV Bharat / state

'மாற்றான் தாய்ப் பிள்ளைகளாக நடத்தப்படுகிறோம்' - அங்கன்வாடி பணியாளர்கள் வருத்தம்!

author img

By

Published : Jan 21, 2021, 9:56 PM IST

தூத்துக்குடி: பணிப் பாதுகாப்பு, ஊதியம் உள்ளிட்டவற்றில் அரசு வஞ்சனை வைப்பதாகவும், தங்களை அரசு ஏன் மாற்றான் தாய்ப் பிள்ளையாக நடத்துகிறது எனவும் அங்கன்வாடி பணியாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

‘மாற்றான் தாய் பிள்ளைகளாக நடத்தப்படுகிறோம்’ -அங்கன்வாடி பணியாளர்கள் வருத்தம்!
‘மாற்றான் தாய் பிள்ளைகளாக நடத்தப்படுகிறோம்’ -அங்கன்வாடி பணியாளர்கள் வருத்தம்!

'அங்கன்வாடி மையங்கள்' அறிவுப் பெட்டகத்தின் அடிப்படை. வளரும் இளம் சிறுவர், சிறுமியர்களுக்கு அடிப்படைக்கல்வி தரமானதாகவும் ஒழுக்கப்பண்புகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் அரசால் ஏற்படுத்தப்பட்ட அடிப்படை கட்டமைப்புகளில் ஒன்றுதான் அங்கன்வாடி மையங்கள். நம் ஊர் பேச்சுவழக்கில் சொல்லப்போனால் பாலர் வாடி மையங்கள் அல்லது சத்துணவு மையங்கள் என அழைப்பதுண்டு.

பள்ளிக்கூடம் இல்லாத கிராமங்களைக்கூட தற்பொழுது கண்டுபிடித்து விடலாம். ஆனால், அங்கன்வாடி மையங்கள் இல்லாத ஊர்களை தற்போது தேடிப்பிடிக்க முடியாது. மலைக் கிராமங்களிலிருந்து மாணவ, மாணவிகள் இவ்வளவு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு வருகிறார்கள் என செய்திகளை நாம் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம்.

ஆனால், போக்குவரத்து வசதி இல்லாத இடங்களில்கூட அரசால் பதிக்கப்பட்ட கல்விக்கூடம் உண்டெனில் அது அங்கன்வாடி மையங்களாகத்தான் இருக்க முடியும். இப்படிப்பட்ட அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த அங்கன்வாடி மையங்களின் தற்போதைய நிலை என்ன?, அங்கன்வாடிகளில் பணியாற்றும் பணியாளர்கள் சரிவர நடத்தப்படுகின்றனரா?, அவர்களின் நிலை என்ன?, கல்வியில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த காமராஜர் காலத்திற்குப்பிறகு அங்கன்வாடி மையங்களிலும், சத்துணவுக்கூடங்களிலும் பணியாற்றும் பணியாளர்கள் தரம் உயர்ந்துள்ளார்களா?, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா?, மொத்தத்தில் அங்கன்வாடி மையங்களில் அடிப்படை தரமாக உள்ளதா? என்பது குறித்து தூத்துக்குடியில் ஈடிவி பாரத் தமிழ்நாடு கள ஆய்வு நடத்தியது.

இதற்கான ஆய்வு மேற்கொள்கையில் தூத்துக்குடி மாவட்ட அங்கன்வாடி பணியாளர்களின் செயலாளர் ராமமூர்த்தி சில கருத்துகளை முன்வைத்தார். அப்போது அவர் கூறுகையில், 'அங்கன்வாடி மையங்கள் பணியாளர், உதவியாளர் ஆகிய இரண்டு பேரைக் கொண்டு செயல்படுகிறது. இதில் அங்கன்வாடி பணியாளர் பணியில் உள்ளவருக்கு மேல்நிலைப்பள்ளி கல்வி தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. அங்கன்வாடி பணியாளருக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு காலமுறை ஊதியமாக 12 ஆயிரம் ரூபாயும், உதவியாளருக்கு எட்டாயிரம் ரூபாய் ஊதியமும் வழங்கி வருகிறது. இரண்டு முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளை பராமரிப்பது தான் அங்கன்வாடி பணியாளர்களின் முக்கியப்பணி. இதில் அவர்கள் அக்குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை கற்றுத் தருவது, ஒழுக்கப் பண்புகளை கற்றுக்கொடுப்பது சிறுநீர், மலம் போன்ற இயற்கை உபாதைகளை கழிக்க சொல்லித்தருவது உள்ளிட்டப் பணிகளை நாள்தோறும் செய்துவருகின்றனர். இதுபோக தடுப்பூசி முகாம்களிலும், கர்ப்பிணி தாய்மார்கள் உள்ள பகுதிகளிலும் கர்ப்ப காலங்களில் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுகளை சரியான முறையில் வழங்குவதும் இவர்களுடைய பணி.

‘மாற்றான் தாய் பிள்ளைகளாக நடத்தப்படுகிறோம்’ -அங்கன்வாடி பணியாளர்கள் வருத்தம்!

இதுதவிர பேறுகாலம் ஆன தாய்மார்களுக்கு, அவருடைய குழந்தைகளின் வளர்ச்சி, எடை, ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றையும் கண்காணித்து சுகாதார அலுவலருக்கு தகவல் அளிப்பதற்கும் சத்துணவுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுதவிர, ஆண்டுதோறும் வாக்காளர் வரைவுப் பட்டியல் பணிக்காகவும் சத்துணவுப் பணியாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

‘மாற்றான் தாய்ப் பிள்ளைகளாக நடத்தப்படுகிறோம்’ -அங்கன்வாடி பணியாளர்கள் வருத்தம்!

இத்தகையப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு பணிச்சூழல் என்பது மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளது. சில இடங்களில் அங்கன்வாடி கட்டடங்கள் புனரமைக்கப்படாமல் இடியும் நிலையில் உள்ள கட்டடங்களில் செயல்படுகின்றன. சில ஊருக்கு ஒதுக்குப்புறமாக சுடுகாடு அருகிலேயும், சில இடங்களில் சொந்த கட்டடங்கள் இல்லாததால் வாடகை கட்டடங்களிலும் அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.

அந்த கட்டடத்திற்கான வாடகைகூட அங்கன்வாடி பணியாளர்கள் தங்களது சொந்த நிதியிலிருந்து கட்டக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு பேறுகால நாட்களில் அரசு சார்பில் வளைகாப்பு நடத்தும் நிகழ்ச்சியையும் கூட அங்கன்வாடி பணியாளர்கள் எடுத்து செய்கின்றனர். ஆனால், இதில் சில நிகழ்வுகள் வருந்தத்தக்க வகையில் அமைந்து விடுகின்றன.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி நேரம் என்பது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் தான். ஆனால், வரையறுக்கப்படாத பணி நேரமாக காலை 9 மணிக்கு பணிக்கு வரும் அங்கன்வாடி பணியாளர்கள் இரவு 7 மணிவரை வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். சிலசமயங்களில் பயிற்சி முகாம் எனும் பெயர்களில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திற்கு அழைக்கப்படும் அங்கன்வாடி பணியாளர்கள் அங்கு அவமதிக்கப்படுகின்றனர்.

உண்மையில் அங்கன்வாடி பணியாளர்கள் சிறப்புடன் நடத்தப்படுவது புதுச்சேரி மாநிலத்தில் தான். அம்மாநிலத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரசு ஊதியமாக மாதம் ரூ.22 ஆயிரம் ரூபாயும், உதவியாளருக்கு மாதம் ரூ.18 ஆயிரமும் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் காமராஜரின் காலத்திற்குப்பிறகு அங்கன்வாடி பணியாளர்களுக்கு என எந்த ஒரு சிறப்புத்திட்டமும் செயல்படுத்தாத நிலையில், அவர்களின் கோரிக்கைகளை எடுத்துரைக்க கடந்த 2000ஆவது ஆண்டில் தான் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

பொதுவாக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் என்பது ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள். ஆனால், அங்கன்வாடி ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் என்பது கிடையாது. பொங்கலுக்கு மட்டுமே போனஸ் என்ற அடிப்படையில் வெறும் ஆயிரம் ரூபாயை கருணைத் தொகையாக வழங்குவார்கள். 1982களில் 175 ரூபாய் சம்பளத்திற்கு அங்கன்வாடிப் பணிக்கு வந்தவர்கள் இவ்வளவு ஆண்டு காலம் ஆகியும் 12 ஆயிரம் மட்டுமே பெறுவது வேதனைக்குள்ளானது. தமிழ்நாட்டில் அங்கன்வாடி பணியாளர்கள் மாற்றான் தாய்ப் பிள்ளைகள் போலவே நடத்தப்படுகிறார்கள்.

எனவே, அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சட்டபூர்வ பென்ஷன் ரூ.7550 வழங்க வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், அங்கன்வாடி பணியாளர்கள் விபத்து போன்றவற்றில் திடீரென மரணித்துவிட்டால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு ஆகவும், உதவியாளர் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடாகவும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து வருகிறோம். இது தொடர்பாக 21, 29ஆம் தேதிகளில் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

இதையும் படிங்க...வீட்டிற்குள் 400 போன்சாய் மரங்கள் வளர்த்து அசத்தும் சுலைமான்

'அங்கன்வாடி மையங்கள்' அறிவுப் பெட்டகத்தின் அடிப்படை. வளரும் இளம் சிறுவர், சிறுமியர்களுக்கு அடிப்படைக்கல்வி தரமானதாகவும் ஒழுக்கப்பண்புகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் அரசால் ஏற்படுத்தப்பட்ட அடிப்படை கட்டமைப்புகளில் ஒன்றுதான் அங்கன்வாடி மையங்கள். நம் ஊர் பேச்சுவழக்கில் சொல்லப்போனால் பாலர் வாடி மையங்கள் அல்லது சத்துணவு மையங்கள் என அழைப்பதுண்டு.

பள்ளிக்கூடம் இல்லாத கிராமங்களைக்கூட தற்பொழுது கண்டுபிடித்து விடலாம். ஆனால், அங்கன்வாடி மையங்கள் இல்லாத ஊர்களை தற்போது தேடிப்பிடிக்க முடியாது. மலைக் கிராமங்களிலிருந்து மாணவ, மாணவிகள் இவ்வளவு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு வருகிறார்கள் என செய்திகளை நாம் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம்.

ஆனால், போக்குவரத்து வசதி இல்லாத இடங்களில்கூட அரசால் பதிக்கப்பட்ட கல்விக்கூடம் உண்டெனில் அது அங்கன்வாடி மையங்களாகத்தான் இருக்க முடியும். இப்படிப்பட்ட அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த அங்கன்வாடி மையங்களின் தற்போதைய நிலை என்ன?, அங்கன்வாடிகளில் பணியாற்றும் பணியாளர்கள் சரிவர நடத்தப்படுகின்றனரா?, அவர்களின் நிலை என்ன?, கல்வியில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த காமராஜர் காலத்திற்குப்பிறகு அங்கன்வாடி மையங்களிலும், சத்துணவுக்கூடங்களிலும் பணியாற்றும் பணியாளர்கள் தரம் உயர்ந்துள்ளார்களா?, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா?, மொத்தத்தில் அங்கன்வாடி மையங்களில் அடிப்படை தரமாக உள்ளதா? என்பது குறித்து தூத்துக்குடியில் ஈடிவி பாரத் தமிழ்நாடு கள ஆய்வு நடத்தியது.

இதற்கான ஆய்வு மேற்கொள்கையில் தூத்துக்குடி மாவட்ட அங்கன்வாடி பணியாளர்களின் செயலாளர் ராமமூர்த்தி சில கருத்துகளை முன்வைத்தார். அப்போது அவர் கூறுகையில், 'அங்கன்வாடி மையங்கள் பணியாளர், உதவியாளர் ஆகிய இரண்டு பேரைக் கொண்டு செயல்படுகிறது. இதில் அங்கன்வாடி பணியாளர் பணியில் உள்ளவருக்கு மேல்நிலைப்பள்ளி கல்வி தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. அங்கன்வாடி பணியாளருக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு காலமுறை ஊதியமாக 12 ஆயிரம் ரூபாயும், உதவியாளருக்கு எட்டாயிரம் ரூபாய் ஊதியமும் வழங்கி வருகிறது. இரண்டு முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளை பராமரிப்பது தான் அங்கன்வாடி பணியாளர்களின் முக்கியப்பணி. இதில் அவர்கள் அக்குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியை கற்றுத் தருவது, ஒழுக்கப் பண்புகளை கற்றுக்கொடுப்பது சிறுநீர், மலம் போன்ற இயற்கை உபாதைகளை கழிக்க சொல்லித்தருவது உள்ளிட்டப் பணிகளை நாள்தோறும் செய்துவருகின்றனர். இதுபோக தடுப்பூசி முகாம்களிலும், கர்ப்பிணி தாய்மார்கள் உள்ள பகுதிகளிலும் கர்ப்ப காலங்களில் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுகளை சரியான முறையில் வழங்குவதும் இவர்களுடைய பணி.

‘மாற்றான் தாய் பிள்ளைகளாக நடத்தப்படுகிறோம்’ -அங்கன்வாடி பணியாளர்கள் வருத்தம்!

இதுதவிர பேறுகாலம் ஆன தாய்மார்களுக்கு, அவருடைய குழந்தைகளின் வளர்ச்சி, எடை, ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றையும் கண்காணித்து சுகாதார அலுவலருக்கு தகவல் அளிப்பதற்கும் சத்துணவுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுதவிர, ஆண்டுதோறும் வாக்காளர் வரைவுப் பட்டியல் பணிக்காகவும் சத்துணவுப் பணியாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

‘மாற்றான் தாய்ப் பிள்ளைகளாக நடத்தப்படுகிறோம்’ -அங்கன்வாடி பணியாளர்கள் வருத்தம்!

இத்தகையப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு பணிச்சூழல் என்பது மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளது. சில இடங்களில் அங்கன்வாடி கட்டடங்கள் புனரமைக்கப்படாமல் இடியும் நிலையில் உள்ள கட்டடங்களில் செயல்படுகின்றன. சில ஊருக்கு ஒதுக்குப்புறமாக சுடுகாடு அருகிலேயும், சில இடங்களில் சொந்த கட்டடங்கள் இல்லாததால் வாடகை கட்டடங்களிலும் அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.

அந்த கட்டடத்திற்கான வாடகைகூட அங்கன்வாடி பணியாளர்கள் தங்களது சொந்த நிதியிலிருந்து கட்டக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு பேறுகால நாட்களில் அரசு சார்பில் வளைகாப்பு நடத்தும் நிகழ்ச்சியையும் கூட அங்கன்வாடி பணியாளர்கள் எடுத்து செய்கின்றனர். ஆனால், இதில் சில நிகழ்வுகள் வருந்தத்தக்க வகையில் அமைந்து விடுகின்றன.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி நேரம் என்பது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் தான். ஆனால், வரையறுக்கப்படாத பணி நேரமாக காலை 9 மணிக்கு பணிக்கு வரும் அங்கன்வாடி பணியாளர்கள் இரவு 7 மணிவரை வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். சிலசமயங்களில் பயிற்சி முகாம் எனும் பெயர்களில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திற்கு அழைக்கப்படும் அங்கன்வாடி பணியாளர்கள் அங்கு அவமதிக்கப்படுகின்றனர்.

உண்மையில் அங்கன்வாடி பணியாளர்கள் சிறப்புடன் நடத்தப்படுவது புதுச்சேரி மாநிலத்தில் தான். அம்மாநிலத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரசு ஊதியமாக மாதம் ரூ.22 ஆயிரம் ரூபாயும், உதவியாளருக்கு மாதம் ரூ.18 ஆயிரமும் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் காமராஜரின் காலத்திற்குப்பிறகு அங்கன்வாடி பணியாளர்களுக்கு என எந்த ஒரு சிறப்புத்திட்டமும் செயல்படுத்தாத நிலையில், அவர்களின் கோரிக்கைகளை எடுத்துரைக்க கடந்த 2000ஆவது ஆண்டில் தான் அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

பொதுவாக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் என்பது ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள். ஆனால், அங்கன்வாடி ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் என்பது கிடையாது. பொங்கலுக்கு மட்டுமே போனஸ் என்ற அடிப்படையில் வெறும் ஆயிரம் ரூபாயை கருணைத் தொகையாக வழங்குவார்கள். 1982களில் 175 ரூபாய் சம்பளத்திற்கு அங்கன்வாடிப் பணிக்கு வந்தவர்கள் இவ்வளவு ஆண்டு காலம் ஆகியும் 12 ஆயிரம் மட்டுமே பெறுவது வேதனைக்குள்ளானது. தமிழ்நாட்டில் அங்கன்வாடி பணியாளர்கள் மாற்றான் தாய்ப் பிள்ளைகள் போலவே நடத்தப்படுகிறார்கள்.

எனவே, அங்கன்வாடி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சட்டபூர்வ பென்ஷன் ரூ.7550 வழங்க வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், அங்கன்வாடி பணியாளர்கள் விபத்து போன்றவற்றில் திடீரென மரணித்துவிட்டால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு ஆகவும், உதவியாளர் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடாகவும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து வருகிறோம். இது தொடர்பாக 21, 29ஆம் தேதிகளில் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

இதையும் படிங்க...வீட்டிற்குள் 400 போன்சாய் மரங்கள் வளர்த்து அசத்தும் சுலைமான்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.