ETV Bharat / state

'உள்ளாட்சிப் பதவிகள் ஏலம் விடப்பட்டால் அது செல்லாது'- அமைச்சர் கடம்பூர் ராஜு

author img

By

Published : Dec 16, 2019, 2:16 PM IST

தூத்துக்குடி: தேர்தல் நடத்தாமல் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்பட்டால் அந்தப் பதவி செல்லாது என்று தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு சித்தர்கள் மாநாடு  தூத்துக்குடி மாவட்டச் செய்திகள்  உள்ளாட்சித்தேர்தல்  திமுகவிற்கு ஜுரம்  admk minister Kadampur raju
'உள்ளாட்சிப்பதவிகள் ஏலம் விடப்பட்டால் அது செல்லாது'- அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள காந்தி மைதானத்தில் சித்தர்கள் சங்கமம் என்ற பெயரில் சித்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு பங்கேற்றார்.

இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், " 2016ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் மறுவரையறை செய்ய வேண்டும் என திமுக நீதிமன்றத்தை நாடியது.

நீதிமன்ற உத்தரவுப்படி மாநிலத் தேர்தல் ஆணையம் வார்டுகளை முறையாக மறு வரையறை செய்து வெளிப்படையாக அறிவித்துள்ளது. நீதிமன்றமும் இதை ஏற்றுக் கொண்டு, தேர்தலுக்கு தடை இல்லை என்று சொன்ன பின்பு தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதன் பின்பும் திமுக தமிழ்நாடு அரசை குறை கூறுவது, அவர்கள் மக்களை சந்திக்கப் பயப்படுகின்றனர் என்பதைக் காட்டுகிறது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக தோல்வியடைந்ததன் மூலமாக அவர்களுக்கு ஏற்பட்ட ஜுரம் இன்னும் தணிந்தபடி இல்லை. திமுகவினருக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. ஆகையால் மக்கள் மன்றத்தை சந்திப்பதற்கு பதில் நீதிமன்றத்தை அணுகி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் எவ்வித குளறுபடியும் இல்லை.

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தாமல், உள்ளாட்சிப்பதவிகள் ஏலம் விடப்பட்டால் அது செல்லாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜனநாயக முறையை மீறி உள்ளாட்சி பதவிகளுக்கு ஏலம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது என்ற நிலைப்பாட்டில் அரசும் உறுதியாக உள்ளது.

'உள்ளாட்சிப் பதவிகள் ஏலம் விடப்பட்டால் அது செல்லாது'- அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

அதிமுக கூட்டணியில் எவ்விதக் குழப்பமும் இல்லை, கூட்டணியில் உள்ள தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கான வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன" என்றார்.

இதையும் படிங்க: பாலியல் குற்றங்களுக்கு என்கவுன்டர் தீர்வாகாது: மருத்துவர்கள் கருத்து

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள காந்தி மைதானத்தில் சித்தர்கள் சங்கமம் என்ற பெயரில் சித்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு பங்கேற்றார்.

இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், " 2016ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் மறுவரையறை செய்ய வேண்டும் என திமுக நீதிமன்றத்தை நாடியது.

நீதிமன்ற உத்தரவுப்படி மாநிலத் தேர்தல் ஆணையம் வார்டுகளை முறையாக மறு வரையறை செய்து வெளிப்படையாக அறிவித்துள்ளது. நீதிமன்றமும் இதை ஏற்றுக் கொண்டு, தேர்தலுக்கு தடை இல்லை என்று சொன்ன பின்பு தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதன் பின்பும் திமுக தமிழ்நாடு அரசை குறை கூறுவது, அவர்கள் மக்களை சந்திக்கப் பயப்படுகின்றனர் என்பதைக் காட்டுகிறது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக தோல்வியடைந்ததன் மூலமாக அவர்களுக்கு ஏற்பட்ட ஜுரம் இன்னும் தணிந்தபடி இல்லை. திமுகவினருக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. ஆகையால் மக்கள் மன்றத்தை சந்திப்பதற்கு பதில் நீதிமன்றத்தை அணுகி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் எவ்வித குளறுபடியும் இல்லை.

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தாமல், உள்ளாட்சிப்பதவிகள் ஏலம் விடப்பட்டால் அது செல்லாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜனநாயக முறையை மீறி உள்ளாட்சி பதவிகளுக்கு ஏலம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது என்ற நிலைப்பாட்டில் அரசும் உறுதியாக உள்ளது.

'உள்ளாட்சிப் பதவிகள் ஏலம் விடப்பட்டால் அது செல்லாது'- அமைச்சர் கடம்பூர் செ. ராஜு

அதிமுக கூட்டணியில் எவ்விதக் குழப்பமும் இல்லை, கூட்டணியில் உள்ள தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கான வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன" என்றார்.

இதையும் படிங்க: பாலியல் குற்றங்களுக்கு என்கவுன்டர் தீர்வாகாது: மருத்துவர்கள் கருத்து

Intro:உள்ளாட்சி பதவிகள் ஏலம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டால் செல்லாது  -அமைச்சர் கடம்பூர் செ.ராஜுBody:உள்ளாட்சி பதவிகள் ஏலம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டால் செல்லாது  -அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

தூத்துக்குடி

உள்ளாட்சி பதவிகள் ஏலம் மூலமாக தேர்ந்தெடுக்கப் பட்டால் அந்தப் பதவி செல்லாது என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள காந்தி மைதானத்தில் சித்தர்கள் சங்கமம் என்ற பெயரில் சித்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு பங்கேற்று அங்கு நடைபெற்ற உலக நன்மை வேண்டி வேள்வி பூஜையிலும் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் மறுவரையறை செய்ய வேண்டும் என திமுக நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்ற உத்தரவுப்படி மாநிலத் தேர்தல் ஆணையம் வார்டுகளை முறையாக மறுவரையறை செய்து  வெளிப்படையாக அறிவித்துள்ளது.நீதிமன்றமும் இதை ஏற்றுக் கொண்டு, தேர்தலுக்கு தடை இல்லை என்று சொன்ன பின்பு தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.இதன் பின்பும் திமுக குறைகூறுவது அவர்கள் மக்களை சந்திக்க பயப்படுகின்றனர் என்பதை காட்டுகிறது. விக்ரவாண்டி, நாங்குநேரி இரு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக பெற்ற தோல்வி மூலமாக அவர்களுக்கு இன்றும் ஜுரம் தணிந்தபடி இல்லை.திமுகவினருக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது.ஆகையால் மக்கள் மன்றத்தை சந்திப்பதற்கு பதில் நீதிமன்றத்தை அணுகி வருகின்றனர்.உள்ளாட்சித் தேர்தலில் எவ்வித குளறுபடியும் இல்லை.

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தாமல், ஏலத்தில் மூலம் பதவி விடப்பட்டால் அது செல்லாது. அதற்கு துணை போகக்கூடாது என தேர்தல் ஆணையமும், அரசும் உத்தரவிட்டுள்ளது. அது மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ,ஜனநாயக முறையை மீறி உள்ளாட்சி பதவிகளுக்கு ஏலம் மூலமாக தேர்ந்தெடுக்கப் பட்டால் அந்தப் பதவி செல்லாது என் நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது. அதிமுக கூட்டணியில் எவ்விதக் குழப்பமும் இல்லை,கூட்டணியில் உள்ள தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கான வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாளை வேட்புமனுத்தாக்கல் முடிவதற்குள் இறுதி வடிவம் பெற்று, அதே கூட்டணியோடு நாங்கள் போட்டியிடுகின்ற நிலையை மக்கள் பார்ப்பார்கள். பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு தமிழகத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது.தெலுங்கானாவில் ஒரு பாலியல் சம்பவத்தில் என்கவுண்டர் நடந்ததால் அது பெரிதாக்கப்பட்டுள்ளது, தொடர் மழையினால் எவ்வித பாதிப்புகளும் இல்லை, மழை அதிகமாகப் பெய்யும் போது தெருக்களில் தண்ணீர் தேங்குவது இயல்பு, அது வெளியேற்றப்படுகிறது, இது தற்காலிக பிரச்சினைதான்,குடிமராத்து பணிகள் காரணமாக நீர்நிலைகள் சேதமடையவில்லை, தொடர் மழையின் காரணமாக விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது, அதனடிப்படையில் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.


பேட்டி: அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.