ETV Bharat / state

5 மாத பெண் குழந்தையின் சடலத்தை ரோட்டில் வீசிச்சென்ற கொடூரம்: பின்னணி என்ன?!

author img

By

Published : Jan 14, 2023, 7:23 PM IST

தூத்துக்குடியில் குறை பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையின் சடலத்தை ரோட்டில் வீசிச் சென்ற கொடூர நபர்கள் யார் என தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 மாத பெண் குழந்தையை ரோட்டில் வீசி சென்ற கொடூரம்
5 மாத பெண் குழந்தையை ரோட்டில் வீசி சென்ற கொடூரம்

தூத்துக்குடி: தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோட்டில் கால்டுவெல் காலனிக்கு செல்லும் பகுதியில், குழந்தையின் சடலம் ஒன்று கிடப்பதாக தூய்மைப் பணியாளர்கள் தென்பாகம் காவல் நிலைய போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அங்கு சென்ற தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தியதில், மர்ம நபர்கள் சிலர் குறை மாசத்தில் பிறந்த பெண் குழந்தையை வீசி சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குறை பிரசவத்தில் பிறந்து 5 மாதங்களே ஆன பெண் குழந்தையின் உடலைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த குழந்தையை கொடூரமாக யார் ரோட்டில் வீசி சென்றது?. முறை தவறி பிறந்ததால் யாரேனும் வீசி சென்றனரா? அல்லது வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்ததன் காரணமாக இறந்ததால் குழந்தையை வீசி சென்றனரா? என பல கோணங்களில் தென்பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சாதி அடிப்படையில் புறக்கணிப்பு: பள்ளி மேலாண்மைக் குழுவை கண்டித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

தூத்துக்குடி: தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோட்டில் கால்டுவெல் காலனிக்கு செல்லும் பகுதியில், குழந்தையின் சடலம் ஒன்று கிடப்பதாக தூய்மைப் பணியாளர்கள் தென்பாகம் காவல் நிலைய போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அங்கு சென்ற தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தியதில், மர்ம நபர்கள் சிலர் குறை மாசத்தில் பிறந்த பெண் குழந்தையை வீசி சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குறை பிரசவத்தில் பிறந்து 5 மாதங்களே ஆன பெண் குழந்தையின் உடலைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த குழந்தையை கொடூரமாக யார் ரோட்டில் வீசி சென்றது?. முறை தவறி பிறந்ததால் யாரேனும் வீசி சென்றனரா? அல்லது வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்ததன் காரணமாக இறந்ததால் குழந்தையை வீசி சென்றனரா? என பல கோணங்களில் தென்பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சாதி அடிப்படையில் புறக்கணிப்பு: பள்ளி மேலாண்மைக் குழுவை கண்டித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.