ETV Bharat / state

மின்னல் தாக்கி பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : Jun 8, 2021, 10:25 PM IST

தூத்துக்குடி: சாத்தூர் அருகே மின்னல் தாக்கி பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

சாத்தூர் அருகே மின்னல் தாக்கி பெண் உள்பட 3 பேர் பலி
சாத்தூர் அருகே மின்னல் தாக்கி பெண் உள்பட 3 பேர் பலி

தூத்துக்குடி: சாத்தூர் சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது நல்லியில் உள்ள துர்க்கையம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடவந்த தங்கமாரி (38), சண்முகசுந்தரவல்லி (56), கருப்பசாமி ஆகியோர் மழை பெய்த காரணத்தினால் கோயில் அருகே ஒதுங்கி இருந்த போது அவர்கள் மீது மின்னல் தாக்கியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த இருவர் நல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சாத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி: சாத்தூர் சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது நல்லியில் உள்ள துர்க்கையம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடவந்த தங்கமாரி (38), சண்முகசுந்தரவல்லி (56), கருப்பசாமி ஆகியோர் மழை பெய்த காரணத்தினால் கோயில் அருகே ஒதுங்கி இருந்த போது அவர்கள் மீது மின்னல் தாக்கியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த இருவர் நல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சாத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒப்பந்த தொழிலாளர்கள் பயணித்த வாகனம் கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.