திருவாரூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு 430 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. பெரும்புகலூர் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ஐயப்பன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவரால் நடத்தப்பட்ட முதல் கூட்டம் என்ற அடிப்படையில், இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குறிப்பாக, விவசாயத்தை அழிக்கும் வகையில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தங்கள் பகுதியில் நிறைவேற்ற விடமாட்டோம் என ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் சார்பில் முழக்கமிட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியான அடியக்கமங்கலம், வரம்பியம், கொத்தமங்கலம், கோட்டூர், இருள்நீக்கி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: 32 வீட்டுமனைப்பட்டா... 2 பேருக்கு உதவித்தொகை... உடனுக்குடன் குறைகளுக்குத் தீர்வு கண்ட வேலூர் கலெக்டர்