ETV Bharat / state

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் சாலை மறியல் - Road pickup by Tasmac in Thiruvarur

திருவாரூர்: நாரணமங்களம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் திடீரென சாலை மறியல்
author img

By

Published : Nov 21, 2019, 12:05 AM IST

திருவாரூர் மாவட்டம் குடவாசலையடுத்து நாரணமங்களம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக்கால் பெண்களும், பள்ளிக் குழந்தைகளும் அவ்வழியாக சென்று வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் கடையை மூட வலியுறுத்தி இரண்டு மாதத்திற்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் டாஸ்மாக் தரப்பினர் 45 நாட்களில் கடையை மாற்றி விடுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு மாதத்திற்கு மேலாகியும் கடை மூடப்படாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் திடீரென நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் திடீரென சாலை மறியல்

இதனையடுத்து காவல்துறையினர், டாஸ்மாக் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மாதத்திற்குள் கடையை வேறு இடத்திற்கு மாற்றிவிடுவோம் என்று உறுதியளித்த பின் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் - அமைச்சர் தங்கமணி

திருவாரூர் மாவட்டம் குடவாசலையடுத்து நாரணமங்களம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக்கால் பெண்களும், பள்ளிக் குழந்தைகளும் அவ்வழியாக சென்று வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தக் கடையை மூட வலியுறுத்தி இரண்டு மாதத்திற்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் டாஸ்மாக் தரப்பினர் 45 நாட்களில் கடையை மாற்றி விடுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு மாதத்திற்கு மேலாகியும் கடை மூடப்படாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் திடீரென நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் திடீரென சாலை மறியல்

இதனையடுத்து காவல்துறையினர், டாஸ்மாக் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மாதத்திற்குள் கடையை வேறு இடத்திற்கு மாற்றிவிடுவோம் என்று உறுதியளித்த பின் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் - அமைச்சர் தங்கமணி

Intro:Body:திருவாரூர் அருகே நாரணமங்களம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் குடவாசலையடுத்து நாரணமங்களம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. பேருந்து நிலையத்திற்க்கு அருகில் அமைந்திருக்கும் இந்த டாஸ்மாக்கால பெண்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் பாதுகாப்பான சூழ்னிலை இல்லை என அப்பகுதி மக்கள் கடையை மூட வலியுறுத்தி கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆதலால் டாஸ்மாக் தரப்பினர் 45 நாட்களில் கடையை மாற்றி விடுவதாக தெரிவித்த நிலையில் இரண்டு மாதத்திற்கு மேலாகிவிட்டதால்
ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த
பெண்கள் இன்று சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து காவல் துறையினர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் பொதுமக்களுடன் நடத்திய பேச்சி வார்த்தையில் இன்னும் ஒரு மாதத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்றி விடுவோம் என்ற உத்திரவாத அடிப்படையில் சாலை மறியல் கைவிடப்பட்டது. 2மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.