ETV Bharat / state

'நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் கார்ப்பரேட்டுகளுக்கானது' - பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

திருவாரூர்: நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் கார்ப்பரேட்டுகளுக்கானது என பி.ஆர். பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : May 18, 2020, 12:00 AM IST

பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

கார்ப்பரேட்டுகளைக் களமிறக்குவதற்கு கரோனாவை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி இந்தியாவைக் கூறு போட்டு, விற்பனை செய்யும் மோசடியில், மோடி அரசு ஈடுபடுவது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சிறப்புப் பொருளாதார அறிவிப்பில் இருந்ததாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஈடிவி பாரத் தமிழ்நாடு இணையதள ஊடகத்திடம் பேசுகையில், "கரோனா தாக்குதலால் இந்தியா முடங்கி உள்ள நிலையில், காய்கனி உள்ளிட்ட விவசாய உற்பத்திப் பொருட்கள் 80 விழுக்காடு முற்றிலும் உற்பத்தி செய்த நிலத்திலேயே அறுவடை செய்ய முடியாமல், விவசாயிகள் கண்ணெதிரிலேயே அழிந்துள்ளது. இதனைப் பார்த்து மனமுடைந்து செய்வதறியாது விவசாயிகள் முடங்கி உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக இழப்பிற்கு நிவாரணம் வழங்கி, நிலுவைக் கடன் முழுமையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்வார்கள் என எதிர் பார்த்தோம். ஆனால் மறுத்து விட்டனர்.

கரோனா மட்டுமின்றி கடந்த 5 ஆண்டுகள் தொடர்ந்து இயற்கைச் சீற்றத்தால் விவசாயம் அழிந்ததால், பெற்ற கடனையே திரும்ப செலுத்த முடியாமல் புதிய கடன் பெறுவதற்கான தகுதியை 80 விழுக்காடு விவசாயிகள் இழந்துள்ளனர். இந்நிலையில் புதிய கடன் கொடுப்பதற்குத் தொகையை உயர்த்துவதால், எந்தப் பயனுமளிக்காது.

விளை நிலங்களில் நிலக்கரி சுரங்கங்கள், மீத்தேன் எரிவாயு கிணறுகள் அமைக்க தனியாருக்கு உடனடியாக அனுமதி வழங்குவதாகவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம் செய்வதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ள நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் அனைத்தும் எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று எண்ணத் தோன்றுகிறது" என்றார்.

இதையும் படிங்க: தனியார் மயமாக்கம் ஜனநாயகத்துக்கு அழகல்ல - புதுச்சேரி முதலமைச்சர்!

கார்ப்பரேட்டுகளைக் களமிறக்குவதற்கு கரோனாவை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி இந்தியாவைக் கூறு போட்டு, விற்பனை செய்யும் மோசடியில், மோடி அரசு ஈடுபடுவது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சிறப்புப் பொருளாதார அறிவிப்பில் இருந்ததாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஈடிவி பாரத் தமிழ்நாடு இணையதள ஊடகத்திடம் பேசுகையில், "கரோனா தாக்குதலால் இந்தியா முடங்கி உள்ள நிலையில், காய்கனி உள்ளிட்ட விவசாய உற்பத்திப் பொருட்கள் 80 விழுக்காடு முற்றிலும் உற்பத்தி செய்த நிலத்திலேயே அறுவடை செய்ய முடியாமல், விவசாயிகள் கண்ணெதிரிலேயே அழிந்துள்ளது. இதனைப் பார்த்து மனமுடைந்து செய்வதறியாது விவசாயிகள் முடங்கி உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக இழப்பிற்கு நிவாரணம் வழங்கி, நிலுவைக் கடன் முழுமையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்வார்கள் என எதிர் பார்த்தோம். ஆனால் மறுத்து விட்டனர்.

கரோனா மட்டுமின்றி கடந்த 5 ஆண்டுகள் தொடர்ந்து இயற்கைச் சீற்றத்தால் விவசாயம் அழிந்ததால், பெற்ற கடனையே திரும்ப செலுத்த முடியாமல் புதிய கடன் பெறுவதற்கான தகுதியை 80 விழுக்காடு விவசாயிகள் இழந்துள்ளனர். இந்நிலையில் புதிய கடன் கொடுப்பதற்குத் தொகையை உயர்த்துவதால், எந்தப் பயனுமளிக்காது.

விளை நிலங்களில் நிலக்கரி சுரங்கங்கள், மீத்தேன் எரிவாயு கிணறுகள் அமைக்க தனியாருக்கு உடனடியாக அனுமதி வழங்குவதாகவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயம் செய்வதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ள நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் அனைத்தும் எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று எண்ணத் தோன்றுகிறது" என்றார்.

இதையும் படிங்க: தனியார் மயமாக்கம் ஜனநாயகத்துக்கு அழகல்ல - புதுச்சேரி முதலமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.