ETV Bharat / state

தனியார் நிதி நிறுவன கடன் சமரச தீர்வு முகாமில் வாக்குவாதம்

author img

By

Published : Jan 23, 2020, 7:46 PM IST

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் தனியார் நிதி நிறுவன கடன் சமரச தீர்வு முகாமில் பன்மடங்கு வட்டி கேட்டதால் முகாமில் பங்கேற்றவர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்
திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தனியார் நிதி நிறுவனம் சார்பில் கடன் தீர்வு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், பொதுமக்கள் வாங்கிய சுய உதவிக் குழு கடன், வீடு கட்டுவதற்கு வாங்கிய கடன் தொகை என முழுவதும் செலுத்திய நிலையில், தற்போது கந்துவட்டி போல மீண்டும் கடுமையாக பணம் கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திருமண மண்டபத்துக்கு வெளியே 100க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

நிதி நிறுவன கடன் சமரச தீர்வு முகாமில் வாக்குவாதம்

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், நிதி நிறுவன ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துச் சென்றனர் .

இதையும் படிங்க: வெடிகுண்டு வீசிய ஆர்எஸ்எஸ் பிரமுகர் - கைது செய்த காவல் துறை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தனியார் நிதி நிறுவனம் சார்பில் கடன் தீர்வு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், பொதுமக்கள் வாங்கிய சுய உதவிக் குழு கடன், வீடு கட்டுவதற்கு வாங்கிய கடன் தொகை என முழுவதும் செலுத்திய நிலையில், தற்போது கந்துவட்டி போல மீண்டும் கடுமையாக பணம் கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு திருமண மண்டபத்துக்கு வெளியே 100க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

நிதி நிறுவன கடன் சமரச தீர்வு முகாமில் வாக்குவாதம்

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், நிதி நிறுவன ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துச் சென்றனர் .

இதையும் படிங்க: வெடிகுண்டு வீசிய ஆர்எஸ்எஸ் பிரமுகர் - கைது செய்த காவல் துறை

Intro:Body:
திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற தனியார் நிதி நிறுவன கடன் சமரச தீர்வு முகாமில் பல மடங்கு வட்டி கேட்டதால் முகாமில் பங்கேற்றவர்கள் ஆத்திரமடைந்து வாக்குவாதம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தனியார் நிதி நிறுவனம் சார்பில் கடன் தீர்வு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, வேதாரணியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பங்கேற்றனர். இந்நிலையில் தாங்கள் வாங்கிய சுய உதவி குழு கடன் மற்றும் வீடு கட்டுவதற்கு வாங்கிய கடன் தொகை முழுவதும் செலுத்திய நிலையில் கந்து வட்டி போல மீண்டும் கடுமையாக பணம் கேட்டுள்ளனர். இதனால் அங்கிருந்தவர்கள் ஆத்திரமடைந்த நிதி நிறுவன ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் முகாம் நடைபெற்ற திருமண மண்டபத்திற்கு வெளியே காத்திருப்பு போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர் .இது குறித்து தகவல் அறிந்த நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிதி நிறுவன ஊழியர்களின் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் .

பேட்டி: இந்துமதிConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.