ETV Bharat / state

பணத்திற்காக மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை - சலவைத் தொழிலாளி கைது - grandmother murdered in Thiruvarur

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்த வழக்கில் சலவைத் தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.

Man arrested grandmother murdered case, பணத்திற்காக மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை
author img

By

Published : Nov 6, 2019, 10:03 AM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மருதவனம் பகுதியைச் சேர்ந்த விவசாயி எம்ஜிஆர் (எ) ராமச்சந்திரன். இவரது மனைவி ராஜேஸ்வரி (65). இவர்களுக்குத் திருமணமான நிலையில் மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை அடையாளம் தெரியாத நபர் வீட்டிற்குள் நுழைந்து ராஜேஸ்வரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பணத்தை திருடிவிட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி காவல் துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். மேலும் திருவாரூரிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை இடப்பட்டது.

Man arrested grandmother murdered case, பணத்திற்காக மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை

தெடர்ந்து பொதுமக்களிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததில், 'ராமச்சந்திரன் வீட்டிற்கு திருத்துறைப்பூண்டி வாளமாபுரம் பகுதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி முருகானந்தம் என்பவர் அடிக்கடி வந்துசெல்வார்' எனக் கூறியுள்ளனர்.

இதையடுத்து காவல் துறையினர் இரவோடு இரவாக முருகானந்தத்தை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் ராஜேஸ்வரியை பணத்திற்காக கழுத்தறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதனடிப்படையில் காவல் துறையினர் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: வட்டாட்சியர் உயிருடன் எரித்துக் கொலை; தெலங்கானாவில் கொடூரம்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மருதவனம் பகுதியைச் சேர்ந்த விவசாயி எம்ஜிஆர் (எ) ராமச்சந்திரன். இவரது மனைவி ராஜேஸ்வரி (65). இவர்களுக்குத் திருமணமான நிலையில் மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை அடையாளம் தெரியாத நபர் வீட்டிற்குள் நுழைந்து ராஜேஸ்வரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பணத்தை திருடிவிட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி காவல் துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். மேலும் திருவாரூரிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை இடப்பட்டது.

Man arrested grandmother murdered case, பணத்திற்காக மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை

தெடர்ந்து பொதுமக்களிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததில், 'ராமச்சந்திரன் வீட்டிற்கு திருத்துறைப்பூண்டி வாளமாபுரம் பகுதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி முருகானந்தம் என்பவர் அடிக்கடி வந்துசெல்வார்' எனக் கூறியுள்ளனர்.

இதையடுத்து காவல் துறையினர் இரவோடு இரவாக முருகானந்தத்தை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் ராஜேஸ்வரியை பணத்திற்காக கழுத்தறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதனடிப்படையில் காவல் துறையினர் முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: வட்டாட்சியர் உயிருடன் எரித்துக் கொலை; தெலங்கானாவில் கொடூரம்!

Intro:Body:திருத்துறைப்பூண்டி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கழுத்தறுத்து கொலை. திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை.

திருத்துறைப்பூண்டி அருகே மருதவனம் பகுதியை சேர்ந்த விவசாயி எம்.ஜி.ஆர் (எ) ராமச்சந்திரன் இவரது மனைவி ராஜேஸ்வரி (65) இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் திருத்துறைப்பூண்டியில் ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ராஜேஸ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.இன்று மாலை மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து ராஜேஸ்வரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். இது குறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலிசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு இந்த கொலை பணத்திற்காகவா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற கொலை சம்பவங்களால் மாவட்டம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.