ETV Bharat / state

பட்டப்பகலில் கொள்ளையர்கள் துணிகரம்: தங்க நகை, கார ் திருட்டு - திருட்டு சம்பவம்

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே வீட்டின் முன்பக்க கதவை உடைத்து 13 சரவன் தங்க நகை, காரை திருடிச் சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

13 sovereign, car theft
author img

By

Published : Aug 1, 2019, 1:36 PM IST

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆப்பரகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (43). இவர் பொன்னிரை அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுமதியும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலையில் இருவரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டனர். இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 13சரவன் தங்க நகை, வெளியில் நின்றிருந்த கார் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர். இதையடுத்து மாலையில் பள்ளி முடிந்து இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்பு உள்ளே சென்று பார்த்தப்போது பீரோவில் இருந்த 13சவரன் தங்கநகை, வெளியில் நின்றிருந்த கார் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் அலிவலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து கைரேகை நிபுணர்களுடன் வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் தங்க நகை, கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆப்பரகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (43). இவர் பொன்னிரை அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுமதியும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலையில் இருவரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுவிட்டனர். இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 13சரவன் தங்க நகை, வெளியில் நின்றிருந்த கார் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர். இதையடுத்து மாலையில் பள்ளி முடிந்து இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்பு உள்ளே சென்று பார்த்தப்போது பீரோவில் இருந்த 13சவரன் தங்கநகை, வெளியில் நின்றிருந்த கார் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் அலிவலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து கைரேகை நிபுணர்களுடன் வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் தங்க நகை, கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:திருத்துறைப்பூண்டி அருகே வீட்டின் முன்பக்க கதவை உடைத்து 13 பவுன் நகை, 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் கார் கொள்ளை. ஆலிவலம் போலீசார் விசாரணை.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆப்பரகுடி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (43) பொன்நிறை அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுமதி, இவர் அருகே உள்ள கச்சனம் கிராமத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு பள்ளிகூடம் சென்று வீடு திரும்பியபோது வீட்டின் முன்பக்க கதவு இடித்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்த போலீசாருக்கு தகவல் தெரிவித்து சோதனை செய்து பார்த்ததில் வீட்டின் பீரோவில் இருந்த 13 பவுன் நகை 25 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துவிட்டு தொடர்ந்து வீட்டில் மாட்டி வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து வாசலில் நின்ற ஆறு லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய காரையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஆலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.