ETV Bharat / state

சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

author img

By

Published : Nov 16, 2019, 7:49 PM IST

திருவாரூர்: மன்னார்குடியில் விபத்து ஏற்படுத்தும் விதமாக சாலையில் சுற்றி திரிந்த 50க்கும் மேற்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் தலா ரூ. 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த மாடுகளை அதன் உரிமையாளர்கள் முறையாக பராமரிக்காமல் பேருந்து நிலையம், முக்கிய கடைவீதிகள், பிரதான சாலைகள், பள்ளி, கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் விட்டுவிடுகின்றனர்.

இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் கால்நடைகள் மீது மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து நகரப்பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது
இதையும் படிங்க: சாகும் நிலையில் 230 மாடுகள்! வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஈடிவி பாரத் - நடவடிக்கைகள் தீவிரம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த மாடுகளை அதன் உரிமையாளர்கள் முறையாக பராமரிக்காமல் பேருந்து நிலையம், முக்கிய கடைவீதிகள், பிரதான சாலைகள், பள்ளி, கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் விட்டுவிடுகின்றனர்.

இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் கால்நடைகள் மீது மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து நகரப்பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது
இதையும் படிங்க: சாகும் நிலையில் 230 மாடுகள்! வெளிச்சத்துக்கு கொண்டு வந்த ஈடிவி பாரத் - நடவடிக்கைகள் தீவிரம்
Intro:Body:மன்னார்குடி நகரத்தில் விபத்து ஏற்படுத்தும் விதமாக சாலையில் சுற்றி திரிந்த 50க்கும் மேற்ப்பட்ட மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு மாடு ஓன்றிற்கு ரூ. 500 அபராதம் நகராட்சி நிர்வாகம் விதிப்பு.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரத்தில் பல்வேறு பகுதிகளில் மாடுகள் வளர்க்கப்படுகிறது. இந்த மாடுகளை உரிமையாளர்களால் முறையாக வளர்க்கப்படாததால் பேருந்து நிலையம், முக்கிய கடைவீதிகள், பிரதான சாலைகள், பள்ளி, கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை போன்ற பகுதி களில் பகல் மற்றும் இரவு முழுவதும் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன.

இந்த மாடுகளுக்கு தீவனங்கள் கிடைக்காமல் சுவற்றில் ஒட்டப்படும் போஸ்டர்கள், சாலையில் கிடக்கும் குப்பைகளில் உள்ள உணவு கழிவுகளை தின்று தங்களின் பசியை போக்கி வருகின்றன.

காலை முதல் இரவு வரை சுற்றி திரியும் மாடுகள் இரவு நேரங்களில் பிரதான சாலைகளில் படுத்து விடுகின்றன. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்கள் கால்நடைகள் மீது மோதிவிடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு கை, கால் எலும்பு முறிவு ஏற்படுவதுடன் சில நேரங்களில் உயிருக்கும் ஆபத்தாகவும் முடிந்து விடுகிறது.

எனவே நகரத்தில் சுற்றித்திரியும் மாடுகளை நகராட்சி நிர்வாகம் பிடித்து பட்டியில் அடைத்து வைத்து அதன் உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். பொறுப்பின்றி கால்நடைகளை சாலைகளில் சுற்றி திரிய விடுபவர்கள் மீது காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நகர் முழுவதும் சுற்றி திரிந்த 50க்கு மேற்பட்ட மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு ஒரு மாட்டிற்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர் .
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.