ETV Bharat / state

அரசு மருத்துவர்களை தாக்கிய, நோயாளியின் உறவினர் கைது..! - மருத்துவ கல்லூரி முதல்வர் விஜயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பு

திருவாரூர்: அரசு மருத்துவமனையில் நேற்று அதிகாலை உடல்நிலை சரியில்லாமல் வந்த நோயாளி இறந்ததை அறிந்த உறவினர் ஒருவர், மருத்துவர்களை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மருத்துவ கல்லூரி முதல்வர் விஜயகுமார்
author img

By

Published : Aug 12, 2019, 6:57 PM IST

திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நேற்று அதிகாலை பவித்திர மாணிக்கம் பகுதியைச் சேர்ந்த காமராஜ்(56) என்பவர் மூச்சுத் திணறல் காரணமாக அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மகன் தாமரைச்செல்வன், பணியிலிருந்த பெண் மருத்துவர் பிரபா மற்றும் செவிலியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனால் மருத்துவர்களும், செவிலியர்களும் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, தாமரைச் செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் தாமரைச் செல்வன் கைது செய்யப்பட்டார்.

மருத்துவ கல்லூரி முதல்வர் விஜயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பு

இந்நிலையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வரும் நபர்களுடன், வருகின்ற உறவினர்கள் மதுபோதையில் வந்தால் உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மது குடித்த கண்டறிவதற்கான கருவிகள் வாங்கப்பட உள்ளன. சோதனை செய்த பின்னரே உறவினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மருத்துவர்கள் பணி பாதுகாப்புக்காகக் கூடுதலாக காவல் துறையினர், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மருத்துவமனை காவலர்களையும் அதிகப்படுத்துவதோடு, சிசிடிவி கேமரா பொருத்தப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” என்றார்.

திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நேற்று அதிகாலை பவித்திர மாணிக்கம் பகுதியைச் சேர்ந்த காமராஜ்(56) என்பவர் மூச்சுத் திணறல் காரணமாக அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மகன் தாமரைச்செல்வன், பணியிலிருந்த பெண் மருத்துவர் பிரபா மற்றும் செவிலியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனால் மருத்துவர்களும், செவிலியர்களும் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, தாமரைச் செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் தாமரைச் செல்வன் கைது செய்யப்பட்டார்.

மருத்துவ கல்லூரி முதல்வர் விஜயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பு

இந்நிலையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வரும் நபர்களுடன், வருகின்ற உறவினர்கள் மதுபோதையில் வந்தால் உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மது குடித்த கண்டறிவதற்கான கருவிகள் வாங்கப்பட உள்ளன. சோதனை செய்த பின்னரே உறவினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

மருத்துவர்கள் பணி பாதுகாப்புக்காகக் கூடுதலாக காவல் துறையினர், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் மருத்துவமனை காவலர்களையும் அதிகப்படுத்துவதோடு, சிசிடிவி கேமரா பொருத்தப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” என்றார்.

Intro:


Body:திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நேற்று அதிகாலை பவித்திரமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த காமராஜ்(56) என்பவர் மூச்சுத் திணறல் காரணமாக அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது மகன் தாமரைச்செல்வன் பணியில் இருந்த பெண் மருத்துவர் பிரபா மற்றும் செவிலியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு தாமரைச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாலுகா போலீசார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் தாமரைச்செல்வன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் மருத்துவ கல்லூரி முதல்வர் விஜய குமார் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது,

மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நபர்களுடன் வரும் உறவினர்கள் மதுபோதையில் வந்தால் உடனடியாக மருத்துவமனையை விட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைக்காக மது குடித்தை கண்டறிவதற்கான கருவிகள் வாங்கப்பட உள்ளன. சோதனை செய்த பின்னரே உறவினர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

மேலும் மருத்துவர்கள் பணி பாதுகாப்புக்காக கூடுதலாக போலிசார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் மருத்துவமனை காவலர்களையும் அதிகரிக்கப்படுவதோடு கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.