ETV Bharat / state

திருவாரூரில் அதிகரித்துக்கொண்டே செல்லும் கரோனா! - everyday corona positive case count

திருவாரூர்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட 22 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 275ஆக அதிகரித்துள்ளது.

corona case in thiruvarur
corona case in thiruvarur
author img

By

Published : Jun 24, 2020, 12:48 PM IST

திருவாரூர் மாவட்டம் நல்லிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் அவருடைய மூன்று மகள்களுக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியரின் மனைவி அவருடைய 15 வயது மகன், 13 வயது மகள் உள்ளிட்ட 22நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுவரை திருவாரூர் மாவட்டம் முழுவதும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மீதம் உள்ள நபர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெட்ரோல் விலையேற்றத்துக்கு எதிராக, காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டம் நல்லிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் அவருடைய மூன்று மகள்களுக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியரின் மனைவி அவருடைய 15 வயது மகன், 13 வயது மகள் உள்ளிட்ட 22நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுவரை திருவாரூர் மாவட்டம் முழுவதும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மீதம் உள்ள நபர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெட்ரோல் விலையேற்றத்துக்கு எதிராக, காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.