ETV Bharat / state

திமுகவிடம் உதவி கோரிய பெண்ணுக்கு ரூ.2 லட்சம் வழங்கிய தமிழ்நாடு அரசு!

author img

By

Published : Jan 30, 2021, 6:17 PM IST

சென்னை: திமுகவிடம் இளம்பெண் ஒருவர் உதவி கோரியிருந்த நிலையில், அந்தப் பெண்ணிற்கு அரசு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது.

Dmk chief stalin
ஸ்டாலின்

திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையில் நேற்று நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்வில் தாயை இழந்த இளம்பெண் ஒருவர் கோரிக்கை மனு அளித்திருக்கிறார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக உதவிகள் கிடைக்கும் என உறுதியளித்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு அப்பெண்ணுக்கு உதவி செய்துள்ளது.

இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், ’திருவண்ணாமலையில் தாயை இழந்த பெண் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வில் மனு கொடுத்திருந்தார்.

DMK chief facebook post
பேஸ்புக் பதிவு

உடனடியாக திமுக உதவும் என உறுதியளித்தேன். பதறிய அரசு 2 லட்ச ரூபாயை வழங்கியிருக்கிறது. திமுகவிடம் கேட்டால்தான் அரசின் காதுகளில் விழுகிறது! நாளை அமையும் திமுக அரசு கேட்காமலும் உதவும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:வாக்குறுதியை நிறைவேற்றாமல் உழவன் மகன் என நடிக்கக் கூடாது - வைகோ

திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையில் நேற்று நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்வில் தாயை இழந்த இளம்பெண் ஒருவர் கோரிக்கை மனு அளித்திருக்கிறார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக உதவிகள் கிடைக்கும் என உறுதியளித்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு அப்பெண்ணுக்கு உதவி செய்துள்ளது.

இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், ’திருவண்ணாமலையில் தாயை இழந்த பெண் #உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்வில் மனு கொடுத்திருந்தார்.

DMK chief facebook post
பேஸ்புக் பதிவு

உடனடியாக திமுக உதவும் என உறுதியளித்தேன். பதறிய அரசு 2 லட்ச ரூபாயை வழங்கியிருக்கிறது. திமுகவிடம் கேட்டால்தான் அரசின் காதுகளில் விழுகிறது! நாளை அமையும் திமுக அரசு கேட்காமலும் உதவும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:வாக்குறுதியை நிறைவேற்றாமல் உழவன் மகன் என நடிக்கக் கூடாது - வைகோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.