திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை மூலம் நடத்தப்படும் இவ்விளையாட்டுப் போட்டிகள் இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளன. இதில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
கபடி போட்டி, வாலிபால், பேட்மிண்டன், சதுரங்கம், நாற்குழி ஆட்டம் போன்ற போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்திவருகின்றனர்.
மாவட்ட அளவில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்படுவார்கள்
இதையும் படிங்க: ‘திருவண்ணாமலையில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி’