திருவண்ணாமலை மாவட்டம் டேனிஷ் மிஷன் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கினார்.
இந்த நிகழ்வுக்கு முன்னதாக முன்னாள் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என பள்ளி வளாகத்தின் முன் மாணவர்கள் திரண்டு கோஷமிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் போராடத்தில் ஈடுபட்ட மாணவர்களை விரட்டினர். இதனால் பள்ளி வளாகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.