ETV Bharat / state

லேப்டாப் கேட்டு அமைச்சர் விழாவில் மாணவர்கள் போராட்டம்! - students protest for Laptop in thiruvannamalai

திருவண்ணாமலை: லேப்டாப் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் விரட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை
author img

By

Published : Jun 29, 2019, 6:57 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் டேனிஷ் மிஷன் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கினார்.

லேப்டாப் கேட்டு அமைச்சர் விழாவில் மாணவர்கள் போராட்டம்

இந்த நிகழ்வுக்கு முன்னதாக முன்னாள் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என பள்ளி வளாகத்தின் முன் மாணவர்கள் திரண்டு கோஷமிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் போராடத்தில் ஈடுபட்ட மாணவர்களை விரட்டினர். இதனால் பள்ளி வளாகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் டேனிஷ் மிஷன் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மாணவர்களுக்கு லேப்டாப்களை வழங்கினார்.

லேப்டாப் கேட்டு அமைச்சர் விழாவில் மாணவர்கள் போராட்டம்

இந்த நிகழ்வுக்கு முன்னதாக முன்னாள் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என பள்ளி வளாகத்தின் முன் மாணவர்கள் திரண்டு கோஷமிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் போராடத்தில் ஈடுபட்ட மாணவர்களை விரட்டினர். இதனால் பள்ளி வளாகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:திருவண்ணாமலையில் மடிக்கணினி கேட்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் , காவல்துறையினர் விரட்டியதால் பரபரப்பு.


Body:திருவண்ணாமலையில் மடிக்கணினி கேட்டு போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் , காவல்துறையினர் விரட்டியதால் பரபரப்பு. திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் பள்ளியில் இன்று மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையேற்று மடிக்கணினிகளை வழங்கினார். முன்னதாக முன்னாள் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கேட்டு 50க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பள்ளி வளாகத்தின் முன்பு வேண்டும் வேண்டும் மடிக்கணினி வேண்டும் என்று கோஷமிட்டனர். இதனை கண்ட காவல்துறையினர் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை விரட்டியடித்தனர். எங்களின் கோரிக்கைகள் என்னவென்று கூட கேட்காமல் மாணவர்களாகிய எங்களை காவல்துறையினர் விரட்டியடிக்கின்றனர் என்று மாணவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இதனால் பள்ளி வளாகத்தின் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.


Conclusion:திருவண்ணாமலையில் மடிக்கணினி கேட்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் , காவல்துறையினர் விரட்டியதால் பரபரப்பு.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.