ETV Bharat / state

திருவண்ணாமலை அருகே இருவேறு விபத்துகளில் 6 பேர் பலி! - Tiruvannamalai accident

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 17, 2023, 9:09 AM IST

Updated : Mar 17, 2023, 10:09 AM IST

வெரையூர், கோலாபாடி விபத்துகளின் வீடியோ

திருவண்ணாமலை: கல்லப்பாடி புதூர் கிராமத்தில் பூச்சி என்ற மூதாட்டி உயிரிழந்தார். இந்த துக்க நிகழ்வுக்கு பெரிய கல்லப்பாடி மற்றும் கொடுக்கப்பட்டு, பேராயம்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து சித்ரா மற்றும் இந்திரா ஆகியோர் வெரையூர் சென்றுள்ளனர். இருபெண்களையும் அவ்வழியாக வந்த கள்ளப்பாடிபுதூரை சேர்ந்த உறவினர் விக்னேஷ் என்ற இளைஞர் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.

வெறையூர் - திருக்கோவிலூர் சாலையில் பைக் சென்றபோது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ்(22), இந்திரா(44), சித்ரா(24) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வெறையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதேபோல, திருவண்ணாமலை அடுத்த கோலாபாடியில் காரும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சாத்தனூர் பகுதியை சேர்ந்த சக்திவேல்(15). இளையராஜா கார் ஓட்டுநர்(28), காமாட்சி(40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், செல்வம்(42), சஞ்சய்(13) ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Swapnalok Fire accident: ஹைதரபாத்தில் பயங்கர தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு!

வெரையூர், கோலாபாடி விபத்துகளின் வீடியோ

திருவண்ணாமலை: கல்லப்பாடி புதூர் கிராமத்தில் பூச்சி என்ற மூதாட்டி உயிரிழந்தார். இந்த துக்க நிகழ்வுக்கு பெரிய கல்லப்பாடி மற்றும் கொடுக்கப்பட்டு, பேராயம்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து சித்ரா மற்றும் இந்திரா ஆகியோர் வெரையூர் சென்றுள்ளனர். இருபெண்களையும் அவ்வழியாக வந்த கள்ளப்பாடிபுதூரை சேர்ந்த உறவினர் விக்னேஷ் என்ற இளைஞர் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.

வெறையூர் - திருக்கோவிலூர் சாலையில் பைக் சென்றபோது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் விக்னேஷ்(22), இந்திரா(44), சித்ரா(24) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வெறையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதேபோல, திருவண்ணாமலை அடுத்த கோலாபாடியில் காரும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சாத்தனூர் பகுதியை சேர்ந்த சக்திவேல்(15). இளையராஜா கார் ஓட்டுநர்(28), காமாட்சி(40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், செல்வம்(42), சஞ்சய்(13) ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Swapnalok Fire accident: ஹைதரபாத்தில் பயங்கர தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு!

Last Updated : Mar 17, 2023, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.