ETV Bharat / state

செங்கத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது!

திருவண்ணாமலை: மாட்டு வண்டியில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட மூவரை வனத்துறையினர் கைது செய்து நீதிமன்றத்ததில் ஆஜர்படுத்தினர்.

author img

By

Published : Dec 5, 2019, 3:03 PM IST

Sand theft in sengam
Sand theft in sengam

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள வலையாம்பட்டு, சென்னசமுத்திரம் பீட் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வம்(37), தினேஷ் (21), காத்தாடி (30). இவர்கள் மூவரும் இன்று அதிகாலை 5:30 மணி அளவில் மாட்டு வண்டியை பயன்படுத்தி மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, வனசரகர் ராமநாதன் தலைமையில் வனகர்கள் வெங்கட்ராமன், ரேவதி, விவேகானந்தன், வனக்காப்பாளர்கள் செல்வராஜ், மோகன், சி.கே வேலு, செல்லையன், ஜெயவேல் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.

மண்ல் திருடியவர்களை கைது செய்த காவல் துறையினர்

அப்போது மாட்டு வண்டியை பயன்படுத்தி மணல் கடத்தி வந்த கொள்ளையர்களை வன அலுவலர்கள் சுற்றி வளைத்தனர். இதையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்து மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். அதன்பின், மூவர் மீதும் காவல் துறையினர் மணல் திருட்டு வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையும் படிங்க:

விதிமுறைகளை மீறி குளத்தில் அள்ளப்பட்ட மணல் ரூ 11 லட்சத்திற்கு ஏலம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள வலையாம்பட்டு, சென்னசமுத்திரம் பீட் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வம்(37), தினேஷ் (21), காத்தாடி (30). இவர்கள் மூவரும் இன்று அதிகாலை 5:30 மணி அளவில் மாட்டு வண்டியை பயன்படுத்தி மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, வனசரகர் ராமநாதன் தலைமையில் வனகர்கள் வெங்கட்ராமன், ரேவதி, விவேகானந்தன், வனக்காப்பாளர்கள் செல்வராஜ், மோகன், சி.கே வேலு, செல்லையன், ஜெயவேல் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.

மண்ல் திருடியவர்களை கைது செய்த காவல் துறையினர்

அப்போது மாட்டு வண்டியை பயன்படுத்தி மணல் கடத்தி வந்த கொள்ளையர்களை வன அலுவலர்கள் சுற்றி வளைத்தனர். இதையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்து மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். அதன்பின், மூவர் மீதும் காவல் துறையினர் மணல் திருட்டு வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையும் படிங்க:

விதிமுறைகளை மீறி குளத்தில் அள்ளப்பட்ட மணல் ரூ 11 லட்சத்திற்கு ஏலம்

Intro:மணல் கொள்ளையில் ஈடுபட்ட மூவரை கைது செய்த வனத்துறை.
Body:மணல் கொள்ளையில் ஈடுபட்ட மூவரை கைது செய்த வனத்துறை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தின் வலையாம்பட்டு சென்னசமுத்திரம் பீட் யை சேர்ந்த செல்வம் வயது 37, தினேஷ் வயது 21, காத்தாடி வயது 30 ஆகிய மூவரும் அதிகாலை 5:30 மதி அளவில் மாட்டு வண்டியை பயன்படுத்தி அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர், இதனைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி வனசரகர் ராமநாதன் தலைமையில் வனகர்கள் வெங்கட்ராமன், ரேவதி, விவேகானந்தன், வனக்காப்பாளர்கள் செல்வராஜ், மோகன், சிகே வேலு, செல்லையன், ஜெயவேல் ஆகியோர் கொண்ட தனிக்குழு மணல் கொள்ளையில் ஈடுபட்ட மூவரையும் சுற்றிவளைத்து மணலுடன் மாட்டுவண்டியை பறிமுதல் செய்து வந்து, செல்வம், தினேஷ், காத்தாடி ஆகிய 3வர் மீதும் மணல் திருட்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று நீதிபதியிடம் ஒப்படைத்தார்கள்.


Conclusion:மணல் கொள்ளையில் ஈடுபட்ட மூவரை கைது செய்த வனத்துறை.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.