கரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அவ்வாறு வருபவர்களை மாவட்ட நிர்வாகம் கரோனா பரிசோதனைக்காகத் தனிமைப்படுத்தும் மையங்களில் தங்கவைக்கிறது. அங்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று இல்லை என்று உறுதியான பின் அவரவர் சொந்த வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.


தனிமைப்படுத்தும் மையங்களில் சுகாதாரம், பராமரிப்பு, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், தற்போது வருவாய்த் துறை அலுவலர்கள் உணவு வழங்கிவருவது வரவேற்ப்பைப் பெற்றுள்ளது.