ETV Bharat / state

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட துரிஞ்சாபுரம் ஒன்றிய கூட்டமைப்பினர்!

author img

By

Published : Jul 18, 2020, 9:53 AM IST

திருவண்ணாமலை: ஊராட்சி மன்றத் தலைவர்களுக்குரிய அதிகாரங்களில் அரசு அலுவலர்கள் தலையிடக்கூடாது என்பதை வலியுறுத்தி துரிஞ்சாபுரம் ஒன்றிய கூட்டமைப்பின் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

Panjayat Presidents Protest in Tiruvannamalai
Panjayat Presidents Protest in Tiruvannamalai

திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை இன்று துரிஞ்சாபுரம் ஒன்றிய கூட்டமைப்பின் சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர்களின் அதிகாரங்களில் அரசு அலுவலர்கள் தலையிடுவதாகவும், ஊராட்சி மன்ற செயலாளர்கள் தலைவர்களை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் கூறி முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பப்பட்டன.

ஊராட்சியில் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பெறுப்பேற்றும், இன்று வரை துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் தலைவர்களுக்கான அதிகாரங்களை அரசு அலுவலர்கள் கொடுக்காமல் அலுவலர்களும், ஊராட்சி மன்ற செயலாளர்களும் தன்னிட்சையாக முடிவெடுத்து பல பணிகளை செயல்படுத்தி வருவதாகவும், அலுவலர்களின் துணையோடு ஊராட்சி மன்ற செயலாளர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.

குறிப்பாக 100 நாள் வேலை திட்டம், ஊராட்சிகளில் வரும் பணிகள், ஊராட்சிப் பணிதள பொறுப்பாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பல வேலைகளை தலைவர்களுக்கு தெரியாமல் அலுவலர்களின் துணையுடன், ஊராட்சி மன்ற செயலாளர்கள் செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனைக் கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு உரிய அதிகாரங்களில் அலுவலர்கள் தலையிடக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இன்று துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை துரிஞ்சாபுரம் ஒன்றிய கூட்டமைப்பின் சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

துரிஞ்சாபுரம் ஒன்றிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் போராட்டம் நடத்துவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துணைத் தலைவர், பொதுமக்கள் தர்ணா!

திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை இன்று துரிஞ்சாபுரம் ஒன்றிய கூட்டமைப்பின் சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர்களின் அதிகாரங்களில் அரசு அலுவலர்கள் தலையிடுவதாகவும், ஊராட்சி மன்ற செயலாளர்கள் தலைவர்களை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் கூறி முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பப்பட்டன.

ஊராட்சியில் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பெறுப்பேற்றும், இன்று வரை துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் தலைவர்களுக்கான அதிகாரங்களை அரசு அலுவலர்கள் கொடுக்காமல் அலுவலர்களும், ஊராட்சி மன்ற செயலாளர்களும் தன்னிட்சையாக முடிவெடுத்து பல பணிகளை செயல்படுத்தி வருவதாகவும், அலுவலர்களின் துணையோடு ஊராட்சி மன்ற செயலாளர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர்.

குறிப்பாக 100 நாள் வேலை திட்டம், ஊராட்சிகளில் வரும் பணிகள், ஊராட்சிப் பணிதள பொறுப்பாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பல வேலைகளை தலைவர்களுக்கு தெரியாமல் அலுவலர்களின் துணையுடன், ஊராட்சி மன்ற செயலாளர்கள் செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனைக் கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு உரிய அதிகாரங்களில் அலுவலர்கள் தலையிடக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இன்று துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை துரிஞ்சாபுரம் ஒன்றிய கூட்டமைப்பின் சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

துரிஞ்சாபுரம் ஒன்றிய கூட்டமைப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் போராட்டம் நடத்துவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துணைத் தலைவர், பொதுமக்கள் தர்ணா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.