ETV Bharat / state

பங்குனி மாத பெளர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கானோர் கிரிவலம்!

author img

By

Published : Apr 6, 2023, 1:21 PM IST

அண்ணாமலையார் கோவிலில் பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்

Etv Bharat
Etv Bharat
பங்குனி மாத பௌர்ணமி: அண்ணாமலையார் கோவிலில் லட்சக்கணக்கானோர் கிரிவலம்!!

திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பௌர்ணமி, ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி கிரிவலம் உலகப் பிரசித்தி பெற்றது.

குறிப்பாக கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் சித்ரா பௌர்ணமி ஆகிய இரண்டு தினங்களில் சுமார் 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்கின்றனர். பின்னர் 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் மலையைச் சிவனாகக் கருதி கிரிவலம் மேற்கொள்வார்கள்.

அதே போன்று ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினத்தன்று தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொள்வார்கள்.

நேற்று பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நண்பகல் முதலே கிரிவலம் மேற்கொண்டனர். பங்குனி மாத பௌர்ணமி புதன்கிழமையான நேற்று காலை 10.15 மணிக்குத் துவங்கி இன்று வியாழக்கிழமை காலை 10.45 மணிக்கு நிறைவடைகிறது.

இந்நிலையில் நேற்று காலை முதல் உள்ளூர், வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆன்மீக பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலையில் 30 லட்சம் பேர் வந்து செல்லும் வகையில் பேருந்து நிலையம் - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

பங்குனி மாத பௌர்ணமி: அண்ணாமலையார் கோவிலில் லட்சக்கணக்கானோர் கிரிவலம்!!

திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பௌர்ணமி, ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி கிரிவலம் உலகப் பிரசித்தி பெற்றது.

குறிப்பாக கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் சித்ரா பௌர்ணமி ஆகிய இரண்டு தினங்களில் சுமார் 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்கின்றனர். பின்னர் 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் மலையைச் சிவனாகக் கருதி கிரிவலம் மேற்கொள்வார்கள்.

அதே போன்று ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினத்தன்று தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொள்வார்கள்.

நேற்று பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நண்பகல் முதலே கிரிவலம் மேற்கொண்டனர். பங்குனி மாத பௌர்ணமி புதன்கிழமையான நேற்று காலை 10.15 மணிக்குத் துவங்கி இன்று வியாழக்கிழமை காலை 10.45 மணிக்கு நிறைவடைகிறது.

இந்நிலையில் நேற்று காலை முதல் உள்ளூர், வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆன்மீக பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலையில் 30 லட்சம் பேர் வந்து செல்லும் வகையில் பேருந்து நிலையம் - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.