திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஆந்திர மாநிலத்திலிருந்து 2600 டன் பச்சரிசி சரக்கு ரயில் மூலம் திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
![ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த பச்சரிசி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvm-01-tvmrailway-station-goods-train-scr-vis-tn10048_10012021125408_1001f_00729_959.jpg)
![பொங்கல் பண்டிகைக்கு ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த பச்சரிசி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10189774_tvm.jpg)
ரயில் நிலையத்திற்கு நேற்றிரவு (ஜன.09) பச்சரிசி வந்தடைந்தது. இதையடுத்து, சரக்கு ரயிலில் இருந்து இன்று (ஜன.10) காலை லாரிகள் மூலம் புது மண்ணை கிராமத்தில் உள்ள அரசு சேமிப்பு குடோனுக்கு அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. அதன் பின்னர் அங்கிருந்து மாவட்டத்தில் அரிசி தேவை உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி மூட்டைகள் பிரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: வா தலைவா! வா - ரஜினியின் அரசியல் வருகைக்காக ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்