ETV Bharat / state

திருவண்ணாமலை காந்திநகர் மைதானத்தில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்க உத்தரவு - Thiruvannamalai District collector Kandasamy

திருவண்ணாமலை: பள்ளி மாணவ மாணவியர்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று (9-9-19) முதல் திருவண்ணாமலை காந்திநகர் மைதானத்தில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை காந்திநகர் மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க உத்தரவு
author img

By

Published : Sep 10, 2019, 8:30 AM IST


திருவண்ணாமலை நகராட்சி திண்டிவனம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுவதை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து வரும் பேருந்துகள் வேட்டவலம், திண்டிவனம், அவலூர்பேட்டை பைபாஸ் சாலை சந்திப்பு வழியாக பேருந்து நிலையம் சென்றடைகிறது. அதே போன்று திருக்கோவிலூரிலிருந்து வரும் பேருந்துகள் எடப்பாளையம் பைபாஸ் சந்திப்பு, மணலூர்பேட்டை சாலை, பழைய அரசு மருத்துவமனை வழியாக பேருந்து நிலையம் சென்றடைகிறது. இந்த 2 வழி தடங்களில் வரும் பள்ளி மாணவர்கள் சுமார் 2½ கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைபாஸ் சந்திப்புகளில் இறக்கப்படுவதால் அவர்கள் பள்ளிகளுக்கு சென்றடைவதில் மிகவும் சிரமப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு விழுப்புரம், திருக்கோவிலூர் வழியில் இயக்கப்படும் அனைத்து அரசு, தனியார் பேருந்துகள் நேற்று (திங்கட்கிழமை) முதல் மேம்பாலப் பணி நிறைவு பெறும் வரையில் காந்திநகர் மைதானம் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இது பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும், அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கும் மிகுந்த பயன் உள்ளதாக அமையும்.


திருவண்ணாமலை நகராட்சி திண்டிவனம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுவதை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து வரும் பேருந்துகள் வேட்டவலம், திண்டிவனம், அவலூர்பேட்டை பைபாஸ் சாலை சந்திப்பு வழியாக பேருந்து நிலையம் சென்றடைகிறது. அதே போன்று திருக்கோவிலூரிலிருந்து வரும் பேருந்துகள் எடப்பாளையம் பைபாஸ் சந்திப்பு, மணலூர்பேட்டை சாலை, பழைய அரசு மருத்துவமனை வழியாக பேருந்து நிலையம் சென்றடைகிறது. இந்த 2 வழி தடங்களில் வரும் பள்ளி மாணவர்கள் சுமார் 2½ கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைபாஸ் சந்திப்புகளில் இறக்கப்படுவதால் அவர்கள் பள்ளிகளுக்கு சென்றடைவதில் மிகவும் சிரமப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு விழுப்புரம், திருக்கோவிலூர் வழியில் இயக்கப்படும் அனைத்து அரசு, தனியார் பேருந்துகள் நேற்று (திங்கட்கிழமை) முதல் மேம்பாலப் பணி நிறைவு பெறும் வரையில் காந்திநகர் மைதானம் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இது பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும், அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கும் மிகுந்த பயன் உள்ளதாக அமையும்.

Intro:பள்ளி மாணவ மாணவியர்கள் கோரிக்கையை திருவண்ணாமலை காந்திநகர் மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்களுக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.Body:பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் திருவண்ணாமலை காந்திநகர் மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்களுக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை நகராட்சி திண்டிவனம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுவதை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து வரும் பஸ்கள் வேட்டவலம், திண்டிவனம் மற்றும் அவலூர்பேட்டை பைபாஸ் சாலை சந்திப்பு வழியாக பஸ் நிலையம் சென்றடைகிறது.அதே போன்று திருக்கோவிலூரில் இருந்து வரும் பஸ்கள் எடப்பாளையம் பைபாஸ் சந்திப்பு, மணலூர்பேட்டை சாலை, பழைய அரசு மருத்துவமனை வழியாக பஸ் நிலையம் சென்றடைகிறது.இந்த 2 வழி தடங்களில் வரும் பள்ளி மாணவர்கள் சுமார் 2½ கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைபாஸ் சந்திப்புகளில் இறக்கப்படுவதால் அவர்கள் பள்ளிகளுக்கு சென்றடைவதில் மிகவும் சிரமப்படுவதாக கலெக்டருக்கு தகவல் வந்தது.இதைத்தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூர் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் மேம்பால பணி நிறைவு பெறும் வரையில் காந்திநகர் மைதானம் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.இது பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும், அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் வணிக நோக்கத்திற்காக வரும் பொதுமக்களுக்கும் மிகுந்த பயன் உள்ளதாக அமையும்.

காந்தி நகர் மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் இன்று திங்கள்கிழமை 9 9 2019 முதல் செயல்பட தொடங்கியுள்ளது.

நகராட்சி சார்பில் குடிநீர் வசதி, மின் விளக்கு, மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

மேலும் ஐந்து முதல் பத்து கிலோ மீட்டர் வரை அதிகதூரம் செல்ல வேண்டியது குறைந்துள்ளதாக பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் இந்த முடிவின் மூலம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் இந்த இரண்டு வழித்தடங்களில் இருந்து பஸ் நிலையம் செல்ல வேண்டிய பயணிகளை காந்திநகர் தற்காலிக பஸ் நிலையம் வழியாக திண்டிவனம் சாலை சந்திப்பு காந்திநகர் லட்சுமிபுரம் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அருகில் இறக்கிவிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.Conclusion:பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் திருவண்ணாமலை காந்திநகர் மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்களுக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.