ETV Bharat / state

திருவண்ணாமலையில் இரு கார்கள் மோதி விபத்து: ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்! - Tiruvannamalai car accident

திருவண்ணாமலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியான நிலையில் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 10, 2023, 3:29 PM IST

திருவண்ணாமலை: சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த காரில் ஓட்டுநர் மற்றும் தனியார் மருந்து நிறுவன விற்பனையாளர் கிஷோர் பயணம் செய்தனர். கீழ்பெண்ணாத்தூர் புறவழிச்சாலை அருகே கார் வந்த பொழுது பெங்களூரிலிருந்து திருவண்ணாமலை வழியாகச் சென்னை சென்ற காருடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த சாலை விபத்தில் சென்னையைச் சார்ந்த தனியார் நிறுவன மருந்து விற்பனையாளர் கிஷோர் (32) சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அந்த காரில் பயணம் செய்த வாகன ஓட்டுநரும் எதிரே வந்த காரில் பயணம் செய்த ஓட்டுநர், மூன்று குழந்தை உட்பட ஐந்து பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகிலிருந்தவர்கள், ஆம்புலன்ஸ் மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதை அடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் சாலை விபத்தில் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சாலை விபத்தில் உயிரிழந்த கிஷோரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சாலை விபத்து குறித்து கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கர்ப்பிணி மீது துப்பாக்கிச் சூடு - சிகிச்சை பலனின்றி பரிதாப பலி!

திருவண்ணாமலை: சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த காரில் ஓட்டுநர் மற்றும் தனியார் மருந்து நிறுவன விற்பனையாளர் கிஷோர் பயணம் செய்தனர். கீழ்பெண்ணாத்தூர் புறவழிச்சாலை அருகே கார் வந்த பொழுது பெங்களூரிலிருந்து திருவண்ணாமலை வழியாகச் சென்னை சென்ற காருடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த சாலை விபத்தில் சென்னையைச் சார்ந்த தனியார் நிறுவன மருந்து விற்பனையாளர் கிஷோர் (32) சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அந்த காரில் பயணம் செய்த வாகன ஓட்டுநரும் எதிரே வந்த காரில் பயணம் செய்த ஓட்டுநர், மூன்று குழந்தை உட்பட ஐந்து பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகிலிருந்தவர்கள், ஆம்புலன்ஸ் மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதை அடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் சாலை விபத்தில் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சாலை விபத்தில் உயிரிழந்த கிஷோரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சாலை விபத்து குறித்து கீழ்பெண்ணாத்தூர் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கர்ப்பிணி மீது துப்பாக்கிச் சூடு - சிகிச்சை பலனின்றி பரிதாப பலி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.