ETV Bharat / state

தி.மலை ஏடிஎம் கொள்ளை வழக்கு: மேலும் ஒருவர் கைது

author img

By

Published : Mar 2, 2023, 12:25 PM IST

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தி.மலை ஏடிஎம் கொள்ளை வழக்கு
தி.மலை ஏடிஎம் கொள்ளை வழக்கு

திருவண்ணாமலை: பிப். 12ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு இடங்களில் அடுத்தடுத்து ஏடிஎம் இயந்திரங்களை வெல்டிங் மூலம் உடைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், உத்தரவின் பெயரில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தனிப்படை போலீசார் முகாமிட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இதனிடையே ஹரியானா மாநிலத்தில் இருந்து முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத் இருவரையும் கைது செய்து விமான மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சாலை மார்க்கமாக திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதேபோல் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் குதரத்பாஷா மற்றும் அப்சர் உசேன் ஆகிய இருவரையும் கைது செய்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

ஏடிஎம் கொள்ளை குறித்து மேலும் பல்வேறு நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என தனிப்படை போலீசார் பல்வேறு மாநிலங்களில் முகாமிட்டு கொள்ளையர்களை தேடி வரும் நிலையில், நான்கு ஏடிஎம் மையங்களை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதற்காக வழிவகை செய்து கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட நிஜாமுதீன் என்ற நபரை கோலார் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏடிஎம் கொள்ளை வழக்கு தொடர்பாக கைது எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள்; வழக்கு பதிவு செய்யாமல் போலீஸ் அலட்சியம்

திருவண்ணாமலை: பிப். 12ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு இடங்களில் அடுத்தடுத்து ஏடிஎம் இயந்திரங்களை வெல்டிங் மூலம் உடைத்து சுமார் 75 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், உத்தரவின் பெயரில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தனிப்படை போலீசார் முகாமிட்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இதனிடையே ஹரியானா மாநிலத்தில் இருந்து முகமது ஆரிஃப் மற்றும் ஆசாத் இருவரையும் கைது செய்து விமான மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சாலை மார்க்கமாக திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதேபோல் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் குதரத்பாஷா மற்றும் அப்சர் உசேன் ஆகிய இருவரையும் கைது செய்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

ஏடிஎம் கொள்ளை குறித்து மேலும் பல்வேறு நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என தனிப்படை போலீசார் பல்வேறு மாநிலங்களில் முகாமிட்டு கொள்ளையர்களை தேடி வரும் நிலையில், நான்கு ஏடிஎம் மையங்களை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதற்காக வழிவகை செய்து கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட நிஜாமுதீன் என்ற நபரை கோலார் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏடிஎம் கொள்ளை வழக்கு தொடர்பாக கைது எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள்; வழக்கு பதிவு செய்யாமல் போலீஸ் அலட்சியம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.