திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 'நீரின்றி அமையாது உலகு' என்ற தலைப்பில் நன்றி அன்னையர் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,"பெண்களின் முன்னேற்றத்துக்காக கடந்த ஆண்டு மட்டும் 275 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 660 கோடி ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. நிதி உதவி பெறும் பெண்கள் தாங்கள் முதலீடு செய்யும் பணம் உறுதியான முன்னேற்றத்தை அடையச் செயல்பட வேண்டும்.
அனைவருமே வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு சிலர் மஞ்சள் தாலிக்கயிறு உடன் வந்தவர்கள் தங்கத்தாலி ஆக மாற்றியதும் உண்டு. அதே போல், தங்கத்தாலி உடன் வந்தவர்கள் மஞ்சள் தாலி கயிறாக மாறிய கதைகளும் உண்டு. எனவே, உறுதியில்லாமல் உற்பத்தித் திறனைக் கொண்டு வர முடியவில்லை. அதற்கு நீங்கள்தான் பொறுப்பு" என்றார்.
இதையும் படிங்க: 'எங்ககிட்ட சரக்கு இருக்கு' - வாசலில் ஆள் நிறுத்தி மது விற்பனையில் ஈடுபட்ட உணவகத்தினர்!