ETV Bharat / state

திருவண்ணாமலையிலிருந்து சொந்த நாடுகளுக்கு செல்லும் பயணிகள்

author img

By

Published : Mar 30, 2020, 7:16 AM IST

திருவண்ணாமலையிலிருந்து சென்னை செல்ல ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டினை சேர்ந்த 24 நபர்களுக்கு அனுமதி சீட்டினை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி வழங்கினார்.

திருவண்ணாமலையில் அமைக்கப்பட்ட வெளிநாட்டவர் உதவி மையம்
திருவண்ணாமலையில் அமைக்கப்பட்ட வெளிநாட்டவர் உதவி மையம்

திருவண்ணாமலைக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் வருகைதந்து இரண்டு முதல் ஆறு மாதங்கள் தங்கி செல்வார்கள். அதன்படி திருவண்ணாமலையில் தற்போது 71 வெளிநாட்டினர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த ஜனவரி மாதத்திற்கு முன்பாக திருவண்ணாமலைக்கு வந்தவர்கள். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் இவர்கள் திருவண்ணாமலை நகரினை விட்டு வெளியேற முடியாத நிலையில், ஜெர்மனி, ஸ்வீடன் நாட்டினைச் சேர்ந்த 24 நபர்கள் அவர்களது நாட்டிற்கு அழைத்து செல்ல தங்களது தூதரகத்தின் மூலம் உதவி கேட்டதன் அடிப்படையில் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் இவர்களை அழைத்து செல்ல உறுதியளித்தது.

திருவண்ணாமலையில் அமைக்கப்பட்ட வெளிநாட்டவர் உதவி மையம்

அதன் பேரில் இவர்கள் அனைவரும் தங்களது நாட்டிற்கு செல்ல சென்னை செல்ல ஏதுவாக திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தின் முன்பாக வெளிநாட்டவர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.17 ஜெர்மனி நாட்டவர்கள் மற்றும் ஏழு ஸ்வீடன் நாட்டவர்களுக்கு சென்னை செல்ல தேவையான பயண அனுமதி சீட்டினை நேற்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி வழங்கினார்.

இதையும் படிங்க: ‘கரோனா பரவலை தடுக்க தனித்திருங்கள்’ -அமைச்சர் விஜயபாஸ்கர்!

திருவண்ணாமலைக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் வருகைதந்து இரண்டு முதல் ஆறு மாதங்கள் தங்கி செல்வார்கள். அதன்படி திருவண்ணாமலையில் தற்போது 71 வெளிநாட்டினர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த ஜனவரி மாதத்திற்கு முன்பாக திருவண்ணாமலைக்கு வந்தவர்கள். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் இவர்கள் திருவண்ணாமலை நகரினை விட்டு வெளியேற முடியாத நிலையில், ஜெர்மனி, ஸ்வீடன் நாட்டினைச் சேர்ந்த 24 நபர்கள் அவர்களது நாட்டிற்கு அழைத்து செல்ல தங்களது தூதரகத்தின் மூலம் உதவி கேட்டதன் அடிப்படையில் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் இவர்களை அழைத்து செல்ல உறுதியளித்தது.

திருவண்ணாமலையில் அமைக்கப்பட்ட வெளிநாட்டவர் உதவி மையம்

அதன் பேரில் இவர்கள் அனைவரும் தங்களது நாட்டிற்கு செல்ல சென்னை செல்ல ஏதுவாக திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தின் முன்பாக வெளிநாட்டவர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.17 ஜெர்மனி நாட்டவர்கள் மற்றும் ஏழு ஸ்வீடன் நாட்டவர்களுக்கு சென்னை செல்ல தேவையான பயண அனுமதி சீட்டினை நேற்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி வழங்கினார்.

இதையும் படிங்க: ‘கரோனா பரவலை தடுக்க தனித்திருங்கள்’ -அமைச்சர் விஜயபாஸ்கர்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.