ETV Bharat / state

மளிகைக்கடையில் கருக்கலைப்பு தொழில்!

திருவண்ணாமலை: மளிகைக் கடை வைத்துக்கொண்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த தம்பதியை காவல்துறையினர் நள்ளிரவில் கைது செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண் கைது
author img

By

Published : May 29, 2019, 1:07 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் பிரபு-கவிதா. இவர்கள் இருவரும் இணைந்து மளிகைக் கடை நடத்தி வந்தனர். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த கவிதா திருமணமான பெண்களுக்கும், கல்லூரிப் பெண்கள் பலருக்கும் மளிகைக் கடையிலேயே கருக்கலைப்பு செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. எனவே, இத்தம்பதியை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், பிரபு-கவிதா தம்பதி நள்ளிரவில் கலசப்பாக்கம் அருகே லாடவரம் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு கருக்கலைப்பு செய்தபோது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மளிகைக்கடையில் கருக்கலைப்பு தொழில்!

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, காவல் கண்காணிப்பாளர் சிபி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பிரபு-கவிதா தம்பதி நடத்தி வந்த மளிகைக் கடையை ஆய்வு செய்தனர். கடையிலேயே கட்டில், மெத்தை, கழிவறை வசதிகள் செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக கருக்கலைப்புத் தொழில் நடைபெற்று வந்தது அதில் தெரியவந்தது. இதனையடுத்து மளிகைக் கடைக்கு உடனடியாக சீல் வைத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், கல்லூரிப் பெண்கள் உட்பட தினமும் மூன்று முதல் நான்கு பேருக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர் என்றும், இதுவரை நான்காயிரம் கருக்கலைப்புகள் வரை செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும், போலி மருத்துவர்கள் மீதும், முறையான அனுமதி பெறாமல் ஸ்கேன் செண்டர்கள் நடத்துபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கைவிடுத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் பிரபு-கவிதா. இவர்கள் இருவரும் இணைந்து மளிகைக் கடை நடத்தி வந்தனர். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த கவிதா திருமணமான பெண்களுக்கும், கல்லூரிப் பெண்கள் பலருக்கும் மளிகைக் கடையிலேயே கருக்கலைப்பு செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. எனவே, இத்தம்பதியை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், பிரபு-கவிதா தம்பதி நள்ளிரவில் கலசப்பாக்கம் அருகே லாடவரம் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு கருக்கலைப்பு செய்தபோது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மளிகைக்கடையில் கருக்கலைப்பு தொழில்!

இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, காவல் கண்காணிப்பாளர் சிபி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பிரபு-கவிதா தம்பதி நடத்தி வந்த மளிகைக் கடையை ஆய்வு செய்தனர். கடையிலேயே கட்டில், மெத்தை, கழிவறை வசதிகள் செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக கருக்கலைப்புத் தொழில் நடைபெற்று வந்தது அதில் தெரியவந்தது. இதனையடுத்து மளிகைக் கடைக்கு உடனடியாக சீல் வைத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், கல்லூரிப் பெண்கள் உட்பட தினமும் மூன்று முதல் நான்கு பேருக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர் என்றும், இதுவரை நான்காயிரம் கருக்கலைப்புகள் வரை செய்திருக்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும், போலி மருத்துவர்கள் மீதும், முறையான அனுமதி பெறாமல் ஸ்கேன் செண்டர்கள் நடத்துபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கைவிடுத்தார்.

Intro:திருவண்ணாமலையில் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கருக்கலைப்பு செய்து வந்த போலி பெண் மருத்துவர் மற்றும் அவரது கணவர் நள்ளிரவில் கைது.

கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் போலி மருத்துவர் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு கருக்கலைப்பில் ஈடுபட்ட பெண் போலி மருத்துவர் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஈசானிய லிங்கம் அருகில் காவியா general stores நடத்தி வரும் பிரபு மற்றும் அவரது மனைவி கவிதா.

இவர்கள் இருவரும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த புகாரின் பலமுறை கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த போலி பெண் மருத்துவர் கருக்கலைப்பில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தனர்.

கலசபாக்கம் அருகே லாடவரம் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டனர்.

கருக்கலைப்பு செய்து கொள்ள வந்த வந்த கணவர் மற்றும் அவரது மனைவி தாயாரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் கடையில் கட்டில் மெத்தை கழிவறை வசதிகள் செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக கருகலைப்பு நடைபெற்று வந்ததை கண்டு பிடித்தனர். இதனை அடுத்து கவிதா நடத்தி வந்த மளிகை கடை சீல் வைக்கப்பட்டது.

கல்லூரி பெண்கள் உட்பட தினமும் மூன்று முதல் நான்கு பெண்கள் கருக்கலைப்பு செய்ய அங்கு வருவதாக கூறிய மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி இதுவரை நான்காயிரம் கருக்கலைப்புகள் வரை செய்திருக்கலாம் கூறினார்.

போலி மருத்துவர்கள் மீதும் முறையான அனுமதி பெறாமல் ஸ்கேன் சென்டர்கள் நடத்தும் ஸ்கேன் சென்டர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி எச்சரிக்கை விடுத்தார்.



Body:திருவண்ணாமலையில் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கருக்கலைப்பு செய்து வந்த போலி பெண் மருத்துவர் மற்றும் அவரது கணவர் நள்ளிரவில் கைது.


Conclusion:திருவண்ணாமலையில் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கருக்கலைப்பு செய்து வந்த போலி பெண் மருத்துவர் மற்றும் அவரது கணவர் நள்ளிரவில் கைது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.