திருவண்ணாமலை மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட சி.என் அண்ணாதுரை அமோக வெற்றி பெற்றார். மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.என் அண்ணாதுரை தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த திருவண்ணாமலை மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த சி.என் அண்ணாதுரை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, 'தேர்தல் பரப்புரையின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு முழுமனதாக பாடுபடுவேன். ஒரு நேர்மையான மக்களவை உறுப்பினராக பணியாற்றுவேன். தன்னுடைய வெற்றிக்காக உழைத்த கட்சித் தொண்டர்கள், கூட்டணி கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி' என்றார்.