ETV Bharat / state

தேங்கி நிற்கும் கழிவு நீரால் டெங்கு கொசு உருவாகும் அபாயம்: மக்கள் அச்சம்

author img

By

Published : Nov 16, 2019, 5:21 PM IST

திருவண்ணாமலை: செங்கம் அருகே ஜீவானந்தம் தெருவில் நீண்ட ஆண்டுகளாக தேங்கிநிற்கும் கழிவுநீரால், டெங்கு கொசுக்கள் உருவாகும் சூழல் ஏற்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Dengue mosquitoes are produced by Stagnant waste water

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலுள்ள ஜீவானந்தம் தெருவில் கழிவுநீர் பல ஆண்டுகளாக தேங்கியுள்ளது. இந்தத் தெருவில் 200-க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்துவருகின்றனர். கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் வாந்தி, பேதி, மர்ம காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

மேலும், கழிவுநீரில் டெங்கு கொசுக்கள் உருவாகும் அபாயகரமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குழந்தைகளைப் பராமரிப்பதில் மிகவும் சிரமப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக்கோரி பேரூராட்சி செயல் அலுவலருக்கு பலமுறை மனு அளித்தும் நீரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

இதேநிலை தொடருமானால், இப்பகுதியிலுள்ள மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்படும் என்பதால் இதனைக் கண்டித்து தொடர் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: டெங்கு உள்ளிட்ட நோய்களில் இருந்து தப்பிக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலுள்ள ஜீவானந்தம் தெருவில் கழிவுநீர் பல ஆண்டுகளாக தேங்கியுள்ளது. இந்தத் தெருவில் 200-க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்துவருகின்றனர். கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் வாந்தி, பேதி, மர்ம காய்ச்சல் போன்ற தொற்று நோய்களால் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

மேலும், கழிவுநீரில் டெங்கு கொசுக்கள் உருவாகும் அபாயகரமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குழந்தைகளைப் பராமரிப்பதில் மிகவும் சிரமப்படுவதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக்கோரி பேரூராட்சி செயல் அலுவலருக்கு பலமுறை மனு அளித்தும் நீரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

இதேநிலை தொடருமானால், இப்பகுதியிலுள்ள மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்படும் என்பதால் இதனைக் கண்டித்து தொடர் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: டெங்கு உள்ளிட்ட நோய்களில் இருந்து தப்பிக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைகள்

Intro:கால்வாயில் இருந்து வரும் சாக்கடை நீர், தேங்கி நிற்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம்.Body:கால்வாயில் இருந்து வரும் சாக்கடை நீர், தேங்கி நிற்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள ஜீவானந்தம் தெருவில் சாக்கடை நீர் பல ஆண்டு காலமாக தேங்கி உள்ளது. இதனால் பல்வேறு நோய்கள் மற்றும் டெங்கு கொசுக்கள் உருவாகும் அபாயகரமான சூழல் நிலவுகிறது.
ஜீவானந்தம் தெருவில் 200க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கழிவு நீர் தேங்கி நிற்பதால் வாந்தி, பேதி மற்றும் மர்ம காய்ச்சலால் இங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலைமையில் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க கோரி பேரூராட்சி செயல் அலுவலருக்கு பலமுறை மனு அளித்தும், பார்வையிட்டதுடன் சரி இந்த நிலைமையை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதே நிலை தொடருமானால் இப்பகுதியிலுள்ள மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும், மேலும் இதனை கண்டித்து தொடர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

Conclusion:கால்வாயில் இருந்து வரும் சாக்கடை நீர், தேங்கி நிற்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.