திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் 17,206 சுகாதார பணியாளர்களுக்கு முதல்கட்டமாக மாவட்டத்திலுள்ள ஆறு இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படவுள்ளது.
அதன்படி ஆரணியை அடுத்த எஸ்வி நகரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
கரோனா தடுப்பு காரணமாக தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வந்தாலும் அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவினர் அதனை மறந்து திரண்டிருந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க... கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை தவிர்க்க கூடாது- அப்போலோ குழுமத் தலைவர்