ETV Bharat / state

'14 முறை சிறைக்குச் சென்றுள்ளேன்' - 'சூல்' எழுத்தாளர் சோ.தர்மன்

திருவண்ணாமலை: சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் தான் 14 முறை சிறைக்குச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் சோ.தர்மனுக்கு பாராட்டு விழா
திருவண்ணாமலையில் சோ.தர்மனுக்கு பாராட்டு விழா
author img

By

Published : Jan 8, 2020, 12:06 AM IST


திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் சாகித்ய அகாதமி விருதுபெற்ற சூல் நாவலின் எழுத்தாளர் சோ. தர்மனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும் சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்த இந்தப் பாராட்டு விழாவிற்கு வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

மேலும் எழுத்தாளர் செயப்பிரகாசம் அவர்கள் வாழ்த்துரை வழங்கியும் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தின் உரிமையாளர் துரை சோ. தர்மனுக்கு நினைவுப்பரிசு வழங்கியும் சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மாணவர்களிடையே உரையாற்றிய சோ. தர்மன், ”மாணவர்களின் முகம் எப்போதும் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிவது போல் மிகவும் பிரகாசமாக இருக்க வேண்டும்.

திருவண்ணாமலையில் சோ. தர்மனுக்கு பாராட்டு விழா

நான் பத்தாம் வகுப்பு கூட படித்துமுடிக்க முடியாமல் பாதியிலேயே ஓடிப்போனவன். நான் 14 முறை சிறைக்குச் சென்றுள்ளேன். சிறையில் உள்ளவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு நாவல்தான். இரண்டு கொலைகள் செய்த ஒருவர் திருந்துவதற்கு காரணமாக இருந்தது ஒரு பெருச்சாளிதான்.

சாப்பாட்டிற்குப் பணம் வாங்குகிற நாடு உருப்படாது, என்று அந்தக் காலத்து பாட்டி தனது பேரனிடம் கூறுவாள். ஏனென்றால் வருவோருக்கெல்லாம் உணவு கொடுத்த நாடு நம்முடைய நாடு. அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய நீர்நிலைகளை குறிக்கும் வகையில்தான் நாவலுக்கு சூல் என பெயரிட்டேன். உங்களுடைய குறிக்கோள் எதுவாக இருந்தாலும் நீங்கள் தொடர்ந்து அதற்காக பயணித்தால் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்” என்று பேசினார்.

இதையும் படிங்க:

' 110 விதியின் கீழ் ஏராளம் திட்டம் தொடங்கியாச்சு ' - முதலமைச்சர் விளக்கம்


திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் சாகித்ய அகாதமி விருதுபெற்ற சூல் நாவலின் எழுத்தாளர் சோ. தர்மனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும் சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்த இந்தப் பாராட்டு விழாவிற்கு வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

மேலும் எழுத்தாளர் செயப்பிரகாசம் அவர்கள் வாழ்த்துரை வழங்கியும் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தின் உரிமையாளர் துரை சோ. தர்மனுக்கு நினைவுப்பரிசு வழங்கியும் சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மாணவர்களிடையே உரையாற்றிய சோ. தர்மன், ”மாணவர்களின் முகம் எப்போதும் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிவது போல் மிகவும் பிரகாசமாக இருக்க வேண்டும்.

திருவண்ணாமலையில் சோ. தர்மனுக்கு பாராட்டு விழா

நான் பத்தாம் வகுப்பு கூட படித்துமுடிக்க முடியாமல் பாதியிலேயே ஓடிப்போனவன். நான் 14 முறை சிறைக்குச் சென்றுள்ளேன். சிறையில் உள்ளவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு நாவல்தான். இரண்டு கொலைகள் செய்த ஒருவர் திருந்துவதற்கு காரணமாக இருந்தது ஒரு பெருச்சாளிதான்.

சாப்பாட்டிற்குப் பணம் வாங்குகிற நாடு உருப்படாது, என்று அந்தக் காலத்து பாட்டி தனது பேரனிடம் கூறுவாள். ஏனென்றால் வருவோருக்கெல்லாம் உணவு கொடுத்த நாடு நம்முடைய நாடு. அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய நீர்நிலைகளை குறிக்கும் வகையில்தான் நாவலுக்கு சூல் என பெயரிட்டேன். உங்களுடைய குறிக்கோள் எதுவாக இருந்தாலும் நீங்கள் தொடர்ந்து அதற்காக பயணித்தால் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்” என்று பேசினார்.

இதையும் படிங்க:

' 110 விதியின் கீழ் ஏராளம் திட்டம் தொடங்கியாச்சு ' - முதலமைச்சர் விளக்கம்

Intro:சாப்பாட்டுக்கு காசு வாங்குகிற நாடு உருப்படாது என்ற எண்ணம் கொண்டவர்கள் வாழ்ந்த நாடு நம் நாடு.


Body:சாப்பாட்டுக்கு காசு வாங்குகிற நாடு உருப்படாது என்ற எண்ணம் கொண்டவர்கள் வாழ்ந்த நாடு நம் நாடு.

சாகித்ய அகாடமி விருது பெற்ற சூல் நாவலின் எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களுக்கு பாராட்டு விழா.

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற சூல் நாவலின் எழுத்தாளர் சோ தர்மன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் மற்றும் சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து இந்தப் பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் பிரகாஷ் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

எழுத்தாளர் செயப்பிரகாசம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தின் உரிமையாளர் துரை அவர்கள் சோ.தர்மன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

ஏற்புரை நிகழ்த்திய சோ.தர்மன் அவர்கள் மாணவர்களிடையே பேசியதாவது,

மாணவர்களின் முகம் எப்போதும் ஆயிரம் வார்ட்ஸ் பல்பு எரிவது போல் மிகவும் பிரகாசமாக இருக்க வேண்டும்,

நான் பத்தாம் வகுப்பு கூட படித்து முடிக்க முடியாமல் பாதியிலேயே ஓடி போனவன்,

அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய நீர்நிலைகளை தான் நான் சூல் என பெயரிட்டுள்ளேன்,

நான் 14 முறை சிறைக்கு சென்று உள்ளேன், சிறையில் உள்ளவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு நாவல் தான், இரண்டு கொலைகள் செய்த ஒருவர், தான் திருந்துவதற்கு காரணமாக இருந்தது ஒரு பெருச்சாளி தான் என்று தெரிவித்தார்.

எனவே குற்றவாளிகளுக்கு மீன்குஞ்சு, கரப்பான்பூச்சி வேறு ஏதாவது ஒன்று கொடுங்கள் அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பாக அமையும்.

சாப்பாட்டிற்கு பணம் வாங்குகிற இந்த நாடு உருப்படாது, என்று அந்த காலத்து பாட்டி தனது பேரனிடம் கூறுவாள். ஏனென்றால் வருவோர்க்கெல்லாம் உணவு கொடுத்த நாடு நம்முடைய நாடு.

உங்களுடைய குறிக்கோள் எதுவாக இருந்தாலும் நீங்கள் தொடர்ந்து அதற்காக பயணித்தால் நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று சோ தர்மன் அவர்கள் பேசினார்.

இந்தப் பாராட்டு விழா நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள், விரிவுரையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Conclusion:சாப்பாட்டுக்கு காசு வாங்குகிற நாடு உருப்படாது என்ற எண்ணம் கொண்டவர்கள் வாழ்ந்த நாடு நம் நாடு.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.