ETV Bharat / state

திருவண்ணாமலையில் 500 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு!

author img

By

Published : May 13, 2021, 1:35 PM IST

திருவண்ணாமலை அருகே 500 லிட்டர் கள்ளச்சாராயத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

500 லிட்டர் சாராயம்
500 லிட்டர் சாராயம்

தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பெருட்களுக்கான கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அருகே வலசை மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான காவலர்கள் நேற்று (மே.12) அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வலசை மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 630 கிலோ வெல்லம் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள், 4 இருசக்கர வாகனங்களையும், விற்பனைக்காக லாரி டியூப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். பின் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

ஏஎஸ்பி கிரண் சுருதி, தானிப்பாடி காவல் நிலையத்திற்கு சென்று பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைப் பார்வையிட்டதை அடுத்து, லாரி டியூப்பில் இருந்த கள்ளச்சாராயத்தை காவல் துறையினர், ஏஎஸ்பி கிரன்சுருதி முன்னிலையில் கீழே கொட்டி அழித்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கில் மது விற்பனை: திண்டுக்கல்லில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் பறிமுதல்

தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பெருட்களுக்கான கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அருகே வலசை மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான காவலர்கள் நேற்று (மே.12) அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வலசை மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 630 கிலோ வெல்லம் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள், 4 இருசக்கர வாகனங்களையும், விற்பனைக்காக லாரி டியூப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். பின் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

ஏஎஸ்பி கிரண் சுருதி, தானிப்பாடி காவல் நிலையத்திற்கு சென்று பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைப் பார்வையிட்டதை அடுத்து, லாரி டியூப்பில் இருந்த கள்ளச்சாராயத்தை காவல் துறையினர், ஏஎஸ்பி கிரன்சுருதி முன்னிலையில் கீழே கொட்டி அழித்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கில் மது விற்பனை: திண்டுக்கல்லில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.