ETV Bharat / state

'மோடியின் வெற்றி இந்துத்துவத்திற்கு கிடைத்த வெற்றி...!'

author img

By

Published : May 31, 2019, 10:36 AM IST

தி.மலை: 'மக்களவைத் தேர்தலில் மோடி வெற்றிபெற்றது இந்துத்துவத்திற்கு கிடைத்த வெற்றி' என்று விஷ்வ இந்து பரிஷத் மாநில அமைப்புச் செயலாளர் ராமன் தெரிவித்துள்ளார்.

ஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் ராமன்

17ஆவது மக்களவைத் தேர்தலில் 353 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது. இதில், பாஜக 303 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் 15ஆவது பிரதமராக நரேந்திர மோடி நேற்று (மே 30) டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவி ஏற்றுக் கொண்டார்.

இதில் வெளிநாட்டுத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள், இணை அமைச்சர்களின் பட்டியல்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றதைக் கொண்டாடும் விதமாக திருவண்ணாமலையில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் அண்ணாமலையார் கோயிலில் வாசல் முன்பு 1008 தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் ராமன்

இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்புச் செயலாளர் ராமன் கூறுகையில், மோடியின் வெற்றி இந்துத்துவத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக பார்க்கிறோம். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும். மோடியின் ஆட்சி அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றி நன்மைகளைச் செய்யக்கூடிய ஒரு சிறப்பான ஆட்சியாக அமையும் என்று தெரிவித்தார்.

17ஆவது மக்களவைத் தேர்தலில் 353 இடங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது. இதில், பாஜக 303 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் 15ஆவது பிரதமராக நரேந்திர மோடி நேற்று (மே 30) டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவி ஏற்றுக் கொண்டார்.

இதில் வெளிநாட்டுத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள், இணை அமைச்சர்களின் பட்டியல்கள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றதைக் கொண்டாடும் விதமாக திருவண்ணாமலையில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் அண்ணாமலையார் கோயிலில் வாசல் முன்பு 1008 தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் ராமன்

இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்புச் செயலாளர் ராமன் கூறுகையில், மோடியின் வெற்றி இந்துத்துவத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக பார்க்கிறோம். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும். மோடியின் ஆட்சி அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றி நன்மைகளைச் செய்யக்கூடிய ஒரு சிறப்பான ஆட்சியாக அமையும் என்று தெரிவித்தார்.

Intro:மீண்டும் இரண்டாவது முறையாக பாரத பிரதமராக மோடி பதவியேற்பதை முன்னிட்டு திருவண்ணாமலை விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதால் அண்ணாமலையார் திருக்கோயில் முன்பு 1008 தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Body:மீண்டும் இரண்டாவது முறையாக பாரத பிரதமராக மோடி பதவியேற்பதை முன்னிட்டு திருவண்ணாமலை விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதால் அண்ணாமலையார் திருக்கோயில் முன்பு 1008 தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் ராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது,

நடந்த முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்துத்துவத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி,

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்கின்ற எண்ணம் கொண்ட ஆட்சி மற்றும் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் ,

அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றி நன்மைகளைச் செய்யக்கூடிய ஒரு சிறப்பான ஆட்சி அமைய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அண்ணாமலையாருக்கு விஸ்வ ஹிந்து பரிசத் வேண்டுகோளாக வைத்தோம்.

அந்த வேண்டுகோள் தற்போது நிறைவேறியுள்ள காரணத்தால் 1008 தேங்காய் உடைத்து எங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினோம் என்று கூறினார்.





Conclusion:மீண்டும் இரண்டாவது முறையாக பாரத பிரதமராக மோடி பதவியேற்பதை முன்னிட்டு திருவண்ணாமலை விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதால் அண்ணாமலையார் திருக்கோயில் முன்பு 1008 தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.